“5 ஆண்டுகளுக்கு முன்பு 17 எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் கடையில் இருந்தனர். அதில் 15 பேர் விற்பனையாகி விட்டனர். தற்போது அந்தக் கடையில் இரு வர் உள்ளனர். இதுவும் அடுத்த 2 மாதங்களில் காலியாகி, மார்ச் மாதம் புதிய சரக்குகள் வரும். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர்கள், ‘வேறு கட்சிக்கு மாற மாட்டார்கள். இதனை சட்டப் பிரமாண பத்திரமாகவும் அவர்கள் தாக்கல் செய்வார்கள்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப் பிட்டுள்ளார். ஆனால், தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு விற்பனையானதை அவர் வசதியாக மறந்து விட்டார்.