மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் ஒரு பழங்குடியினச் சமூகம் அரசு தலைமையிலான ஒரு கொடூரத்தை எதிர்கொண்டது. ஜனநாயக செயல் முறை மற்றும் குற்றவியல் நீதி அமை ப்பு மீதான நம்பிக்கை வலுப்படும் வகையில் அது நடத்திய போராட்டம் தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது.
சிறந்த முன்னுதாரணம்!
655 ஆதிவாசிகளை கொண்ட ஒரு சமூகம் ஒரு மாநிலத்தின் கூட்டு பலத்தை தோற்கடித்தது என்பது இதுவே முதல் முறை.செப்டம்பர் 29 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதற்கு கிடைத்த வெற்றி இந்திய நீதித்துறையில் ஒரு முன்னுதாரண மான மாற்றமாகும்.
குடிநீரிலும் விஷம் கலந்த கொடுமை
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத் தில் உள்ள வாச்சாத்தி மக்கள் தலை முறை தலைமுறையாக கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சித்தேரி மலையடி வாரத்தில் வாழ்ந்தவர்கள். ஜூன், 20. 1992 அன்று நடந்தது அவர் களுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டது. காவல்துறை,வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 265 பேர் அந்த கிராமத்தின் மீது படை யெடுத்தனர். அந்த மக்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட சந்தன மரங்களை பதுக்கி வைத்திருப்ப தாகவும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தனர் என்றும் குற்றம்சாட்டினர். அடுத்த மூன்று நாட்களுக்கு கிராம மக்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனை வரும் தாக்கப்பட்டனர். அவரது வீடுகள் அழிக்கப்பட்டன.கிணறுகளில் விஷம் கலக்கப்பட்டது. ஒரு சிறுமி உட்பட 18 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். இவை அனைத்தும் முதலமைச்சராக இருந்த ஜெய லலிதாவின் ஆட்சிக்காலத்தில் நடந்தது.
அதிகார வர்க்கத்தை பாதுகாத்த அரசுகள்!
அரசு அதன் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய மறுத்த தால் கிராம மக்கள் மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணையை நாட சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1996இல் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை தர்மபுரியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 15 ஆண்டு கள் நடந்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன்கீழ் பாலியல் பலாத்காரம் முதல் அட்டூழியங்கள் வரை குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் குற்றவாளிகள் என 2011இல் விசார ணை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டது. இந்த உத்தரவு அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகை யில் முதன்முதலாக கிடைத்த வெற்றி ஆகும். ஆனால் அதிகாரிகளால் செய்யப்பட்ட மேல்முறையீடுகளில் இந்த உத்தரவு சென்னை உயர்நீதி மன்றத்தால் நிறுத்தப்பட்டது. திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் அடுத்த டுத்து வந்த மாநில அரசுகள் தங்களின் அதிகார வர்க்கத்தை பாதுகாக்க விரும்பின. நிர்வாகத்தின் மூன்று பிரிவு களின் சுயாட்சியை தக்க வைக்கும் முயற்சியில் நீதித்துறை அரசாங்கத்து டன் முரண்பாடு ஏற்படும் தருணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் விசாரணை நீதி மன்றத்தின் தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதி செய்து தீர்ப் பளித்துள்ளது.
ஆதிவாசிகளின் போராட்டம் வெற்றி!
மேலும் எஸ்சி/எஸ்டி சட்டம் பய னற்றது என அடிக்கடி விமர்சிக்கப் பட்டாலும் வாச்சாத்தி வழக்கில் அதன் நோக்கம் நிறைவேறியது என்பது ஒரு அரிய நிகழ்வு. இந்த தீர்ப்பு ஆதி வாசிகளின் உரிமைகளுக்கான நீண்ட நெடிய போரில் ஒரு முக்கிய தருண மாகவும் அமைந்துள்ளது. இந்தியா வில் அப்பட்டமான ஏற்றத்தாழ்வு கள் இருந்தபோதிலும் விழிப்புடன் இருக்கக்கூடிய சிவில் சமூகம் உறுதி யான வழக்கறிஞர்கள், சுதந்திர மான நீதித்துறை மற்றும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைப்பதற்கான உறுதிப்பாடு ஆகியவை மூலம் ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பையும் நீதித் துறையையும் தங்களுக்கு சாதக மாக செயல்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாக மாற்றலாம் என்பதை இது என்றைக்கும் நினைவு கூரும்.
தி இந்து தலையங்கம் (2/10/23)
- தமிழில்: கடலூர் சுகுமாரன்