பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத்தின் 19-ஆவது நினைவு நாளான நவம்பர் 11 அன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏகாதிபத்திய-சியோனிச பயங்கரவாதத்திற்கு எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒற்றுமை பேரணி மற்றும் பொதுகூட்டம் நடைபெற்றது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பினராயி விஜயன், எம்.வி.கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.