states

img

பெண் ஆட்சியருக்கே தீண்டாமை

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநி லத்தின் பீட்டல் மாவட்டத்தில் துணை  ஆட்சியராக இருந்தவர் நிஷா பாங்ரே. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் தனது  சொந்த கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில்  பங்கேற்பதற்காக மாநில அரசு துறை அதிகாரி களிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அவ ருக்கு விடுப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து  பல்வேறு உயர் அதிகாரிகளிடம் தனது நிலை யைக் கூறி விடுமுறை தருமாறு கோரியுள்ளார். ஆனால் இறுதிவரை அவருக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில், அவர் தனது பதவி யை ராஜினாமா செய்வதாக துறை அலுவலர் களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ராஜினாமா கடி தத்தையும் மாநில அரசு அதிகாரிகள் ஏற்க வில்லை. அதனால், நிஷா பாங்ரே தான் பணி யாற்றும் பீட்டல் மாவட்டத்திலிருந்து தலைநகர் போபால் நோக்கி பாதயாத்திரை செல்வதாக அறிவித்து, கடந்த செப்.28 அன்று நடைபய ணத்தை தொடங்கினார். அக். 9 அன்று நிஷா பாங்ரே தலைநகர் போபாலை வந்தடைந்தார். அண்ணல் அம்பேத்கர் படத்துடன் பாஜக முதல்  வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வீடு நோக்கி பாத யாத்தி ரையை தொடங்கினார். இதற்கு அனுமதி மறுத்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நிஷா பாங்ரேவை வலுக்கட்டாயமாக தரதர வென இழுத்து கைது செய்தனர். 

ஆடையை கிழித்த காவல்துறை அதிகாரிகள்

நிஷா பாங்ரேயை கைது செய்யும் பொழுது  அவர் அணிந்து இருந்த ஆடையை இழுத்து  கிழித்து அரை நிர்வாணப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மேலும் அவர்  கையில் வைத்து இருந்த அம்பேத்கர் படத்தை யும் வாங்கி காவல்துறையினர் கிழித்துள்ளனர். எனினும் நிஷா பாங்ரே கிழிந்த நிலையில் தூக்கி  எறியப்பட்ட அம்பேத்கர் புகைப்படத்தை எடுத்துக் கொண்டும், கிழிந்த நிலையிலான உடையுடனும் காவல்துறை வாகனத்தில் சென்றார். நிஷா பாங்ரே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு விடுமுறையும் அளிக்காமல், ராஜினாமா கடிதத்தையும் பெறா மல் தீண்டாமை எண்ணத்துடன் கொடுமைப் படுத்தி இறுதியில் உடையைக் கிழித்து கைது செய்துள்ளது ஆளும் பாஜக அரசு.