ஜூன் 28-ஆம் தேதி போபாலில் இருந்து தில்லிக்கு சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கியுள்ளார். அந்த டீயின் விலை ரூ.20. ஆனால், ஜிஎஸ்டியை சேர்த்து ரூ.50 என ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி யடைந்த அந்த பயணி ரயில்வேயின் உயர்தர சேவைக்கு சான்றாக, ரசீதை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில், ‘‘ரூ.20 மதிப்புள்ள ஒரு கப் டீக்கு ரூ.50 ஜிஎஸ்டி. மொத்தத்தில், ஒரு டீ மதிப்பு ரூ. 70. இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?’’ என பதிவிட்டுள்ளார்.
பீகார் மாநிலம், பாட்னா பல்கலைக்கழகத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.