states

img

மருந்து வாங்கச் சென்ற விவசாயிக்கு லாட்டரியில் ரூ.2.5 கோடி பரிசு

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் ஷீத்தல் சிங். விவசாயியான இவர்  தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மருந்து வாங்க செல்லும் பொழுது,  லாட்டரிச் சீட்டு ஒன்றையும் வாங்கி வீட்டிற்குத் திரும்பி களைப்பில் தூங்கி விட்டார். சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு லாட்டரி கடை நடத்தும் உரிமையாளர்  2.5 கோடி ரூபாய் வென்றதாக ஷீத்தல் சிங்கிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட ஷீத்தல்  சிங் அதிர்ச்சியில் அழுதே விட்டார். விவசாயிக்கு கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு தொடர்  பாக ஹோஷியார்பூர் பகுதியில் சிறியளவில் கொண்டாட்ட நிகழ்வும் அரங்கேறியுள்ளது.