states

அபே மரணம் : இந்தியா துக்கம்

புதுதில்லி, ஜூலை 8 - ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணத்திற்கு சனியன்று ஒருநாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப் படும் என பிரதமர் மோடி இரங்கல் செய்தியுடன் அறிவித்துள் ளார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படு கொலை செய்யப்பட்டதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந் தேன். நீண்ட காலமாக இந்தியாவின் சிறந்த நண்பராகவும், நலம் விரும்புபவராகவும் இருந்தார். இந்திய - ஜப்பான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் முக்கிய பங்கு வகித்தவர் அபே  என காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.