states

img

மோடி 3.0 ஆட்சியின் ஒரே வருடத்தில் 947 வெறுப்பு குற்றச்சம்பவங்கள்

மோடி 3.0 ஆட்சியின் ஒரே வருடத்தில் 947 வெறுப்பு குற்றச்சம்பவங்கள்

602 வெறுப்புக் குற்றங்கள் ; 345 வெறுப்புப் பேச்சுகள் ; 25க்கும் மேற்பட்டோர் பலி


புதுதில்லி சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஜூன் 9, 2024 அன்று பிரதமராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒரே வருடத்தில் 947 வெறுப்புக் குற்றச் சம்ப வங்கள் பதிவாகியுள்ளதாக சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (Association for Prote ction of Civil Rights - ஏபிசிஆர்) அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ஏபிசிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின்பு ஒரே வருடத்தில் 947 வெறுப்புக் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 345 வெறுப்புப் பேச்சுகள் ; 602 வெறுப்புக் குற்றங்கள் ஆகும். இந்த 602 வெறு ப்புக் குற்றங்களில் 173 குற்றங்கள் சிறுபான்மை யினரை இலக்காகக் கொண்ட உடல் ரீதியான வன்முறையை உள்ளடக்கியது. அவற்றில் 25 குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் உயி ரிழந்தனர் (25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம்). குறிப்பாக சிறுபான்மையினரை இலக்காக குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்கு தலில் பாதிக்கப்பட்ட அனைவரும் முஸ்லிம் கள் ஆவர். இந்துக்களும் பாதிப்பு முஸ்லிம்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வெறுப்புக் குற்றச்சம்பவங்களில் 25க்கும் மேற்பட்ட இந்து நபர்களும் பாதிக்கப்பட்டுள்ள னர். வெறுப்புக் குற்றத்தில் இந்து மக்கள் இலக்குகளாக இல்லாவிட்டாலும், அவர்கள் சம்பவ இடத்தில் இருந்ததால் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்துக்க ளில் ஆண்களை விட பெண்களே  அதிகம் என்பது மிக மோசமானது. மோடி : 5 முறை  2024 ஜூன் 7 முதல் 2025 ஜூன் 7 வரை பதிவான 345 வெறுப்புப் பேச்சுக்களில் 178 பேச்சுக்கள் பாஜக மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்க ளால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இதில்  பிரதமர் மோடியும் விதி விலக்கல்ல. குறிப்பாக 5 வெறுப்புப் பேச்சுக்கள், மோடியால் நிகழ்த்தப் பட்டுள்ளன. அதே போல 63 பேச்சுக்ள் பாஜக அரசுகளின் முதலமைச்சர்களால் நிகழ்த்தப் பட்டுள்ளன. 71 பேச்சுகள் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பாஜக எம்.பி., எம்எல்ஏக்களால் நிகழ்த்தப்பட்டன. மாதம் 80 சம்பவங்கள் நாட்டில் வெறுப்புக் குற்றங்கள் மிகவும் வழக்கமாகிவிட்டதால், ஒரு மாதத்தில் 80 சம்ப வங்கள் பதிவு செய்வது சர்வசாதாரணமாக மாறி விட்டது. அதே போல சேகரிக்கப்பட்ட தரவுக ளின்படி, நாடு முழுவதும் அக்டோபர் 2024 மற்றும் ஏப்ரல் 2025 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான (80க்கும் மேல்) வெறுப்புக் குற்றங்களும் வெறுப்புப் பேச்சுகளும் பதிவாகி யுள்ளன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாஜக தான் வெறுப்புக் குற்றங்களின் தலைமையகம் வன்முறை மற்றும் மதவெறி நிகழ்ச்சி நிரல்கள் ஒருபோதும் விளிம்பு நிலை சக்திக ளின் செயல் அல்ல. மாறாக பாஜக தலைமையிலி ருந்தே நேரடியாக உருவாகின்றன. அதாவது பாஜகவிடம் பெறப்படும் உத்தரவு மூலமாக வெறுப்புக் குற்றங்கள் நிகழ்கின்றன. 345 வெறுப்புப் பேச்சுகளில், பாஜக 178 வெறுப்புப் பேச்சு சம்பவங்களுடன் முதலிடத்திலும், விஷ்வ இந்து பரிஷத் 21 வெறுப்புப் பேச்சு சம்பவங்க ளுடன் இரண்டாவது இடத்திலும், பஜ்ரங் தளம் 20 சம்பவங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன என அறிக்கையில் ஏபிசிஆர் கூறி யுள்ளது.