புதுதில்லி, நவ. 25 - 8 இந்தியர்களின் மரண தண்டனை யை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் இந்த மேல்முறையீடு மீது விசாரணை நடத்துவது தொடர்பான தேதி எதையும் கத்தார் நீதிமன்றம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 8 பேர் கத்தா ரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக் னாலஜிஸ் & கன்சல்டன்ஸி சர்வீசஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் கத்தாரின் ஆயுத படைகளுக்கு பயிற்சி மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளை வழங்கி வந்தது. இந்நிலையில், இந்திய கடற்படை யின் முன்னாள் வீரர்கள், இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாக குற்றச் சாட்டு எழவே, அவர்கள் 2022 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை கடந்த ஓராண்டாக நடை பெற்று வந்த நிலையில் கடந்த அக்டோ பர் 26 அன்று, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புரேநேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகிய 8 இந்தி யர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடற்படை அதிகாரிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறை யீடு செய்து வந்தனர். ஆனால் அந்த மேல்முறையீடுகளை கத்தார் நீதி மன்றம் தொடர்ந்து நிராகரித்துவந்தது. இந்நிலையில்தான் திடீர் திருப்ப மாக மேல்முறையீட்டு மனுக்களை முதன்முறையாக கத்தார் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அனை த்து மனுக்களும் நன்றாக ஆராயப் படும். அதன்பிறகு அடுத்தகட்ட விசார ணை குறித்து விரைவில் அறிவிக்கப் படும் என்று கத்தார் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது இந்திய கடற்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையை யும் ஆறுதலையும் அளித்துள்ளது. எனினும் விசாரணை தொடர்பான உறுதியான தேதி எதையும் கத்தார் நீதிமன்றம் அறிவிக்காதது சற்று கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.