அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
வாஷிங்டன், ஜூன் 3 - ஆர்எஸ்எஸ் - பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதவை அல்ல; இப்போதும் 60 சதவிகித இந்தி யர்கள் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களிக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்காவின் மூன்று நகரங்க ளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள பிரபல அமெரிக்க இந்தியரான பிரங்க் இஸ்லாம் வழங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து ராகுல் காந்தி கூறியதாவது: “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் தந்திரங்களைத் தோற்கடிக்க முடியாது என்று நம்பும் போக்கு மக்களிடம் உள்ளது. அது உண்மை யில்லை. நான் இங்கே ஒரு சிறிய கணிப்பை கூறுகிறேன்.
அடுத்து வரும் மூன்று, நான்கு தேர்தல்களில் காங்கிரஸ் நேரடியாக மோதினால் பாஜக அழிவைச் சந்திக்கும். அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் அவர்களுக்கு மிகவும் கடினமானதாகத்தான் இருக்கும். நாங்கள் கர்நாடகாவில் செய்ததை மற்ற மாநிலங்களிலும் செய்வோம். ஆனால், இந்திய ஊடகங்களைக் கேட்டால், அப்படி எதுவும் நடக் காது என்று சொல்லும். இந்திய ஊடகங்கள் தற்போது பாஜக-வுக்கு ஆதரவாக உள்ளன. இந்தியாவில் 60 சதவிகித மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்கவில்லை, நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக வசம் பிரச்சாரக் கருவிகள் இருப்பதால் அவர்கள் அதிகமாகச் சப்தமிடலாம். அதைச் செய்வதில் அவர்கள் வல்லவர்கள். ஆனால், பெரும்பான்மையான இந்திய மக்கள் அவர்களுடன் இல்லை. ஜனநாயகத்தின கட்டமைப்பை மீண்டும் உருவாக்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை. அது மிகவும் கடினமானது. அதற்கு அதிக நேரம் எடுக்கும். ஆனால், பாஜக-வை வீழ்த்துவதற்கான அடிப்படைகள் எங்களிடம் இருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மோடியை வீழ்த்த முடியாது என்று ஊடகங்கள் சொல்லி நீங்கள் (பார்வையாளர்கள்) கேட்டி ருப்பீர்கள். அதில் பலவும் மிகைப் படுத்தப்பட்டவை. உண்மையில் அவர் (மோடி) மிகவும் பலமிழந்து இருக்கிறார். நாட்டில் பெரிய அளவில் வேலையில்லா திண்டாட் டம் நிலவுகிறது. விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சனைகளால் இந்திய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.