புதுதில்லி, ஜன. 5 - உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் இருந்து 4 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை வீடுகளிலிருந்து வெளி யேற்ற உத்தரவிட்ட அம்மாநில உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உத்தரகண்ட்டில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மூன்றாவது பெரிய மாநகரம் ஹல்த்வானி. இங்கு ரயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் ஆக்கிர மித்திருப்பதாக நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்த உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், “ரயில்வே நிலத்தை ஆக்கிரமத்திருக் கும் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், நிலத்தை ரயில்வே வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஹல்த்வானி பகுதி யில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் இடத்திலிருந்து, காலி செய்தால் தாங்கள் எங்கே போவது? என்று தெரியாமல் திகைத்த 4 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங் கள் பிரார்த்தனை,
மெழுகுவர்த்தி ஊர்வலம், உள்ளிருப்புப் போராட்டம் மூலம் தங்களின் எதிர்ப்பை தெரிவித்த னர். நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி உள்ளூர் மசூதியில் கூட்டுத்தொழுகை யிலும் ஈடுபட்டனர். மஸ்ஜித் உமர் இமாம், மௌலானா முகிம் காஸ்மி தலைமையில் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. மாறாக, முஸ்லிம் குடும்பங்களை ஹல்த்வானியிலிருந்து வெளியேற்ற உத்தரகண்ட் மாநில பாஜக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக முஸ்லிம்களை வீடுகளிலிருந்து வெளியேற்றும் உத்தர கண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷணும் இதுதொடர்பாக நீதிபதிகளிடம் முறையிட்டார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ. நசீர் மற்றும் பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு வை வியாழனன்று விசாரித்தது. அப்போது 4 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்றும் உத்தர கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அதிரடியாக இடைக்காலத் தடை விதித்தது. ‘’50 ஆயிரம் மக்களை ஒரே இரவில் வெளியேற்ற முடியாது. அந்த நிலத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை என்றாலும், அவர்களை வகைப்படுத்த வேண்டும். ரயில்வே-க்கு அந்த நிலம் அவசியம் எனில், பொதுமக்களுக்கு மாற்று இடம் அளிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். இந்த பிரச்சனை க்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்’’ என தெரிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அடுத்தகட்ட விசாரணையை வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.