states

“எண்ணெய் எடுக்கப்பட்ட தவிட்டுக்கும் 5 சதவிகித ஜிஎஸ்டி!”

புதுதில்லி, மே 5 - எண்ணெய் எடுக்கப்பட்ட தவிடு மீதும் 5 சத விகித சரக்கு - சேவை வரி (GST) விதிக்க  ஒன்றிய அரசின் உணவுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. நெல்லில் இருந்து அரிசியை பிரித்து எடுக்கும்போது தவிடு கிடைக்கிறது. இந்த தவிட்டிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த தவிட்டு எண்ணெய் (Bran oil) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இதன்காரணமாக, தவிட்டுக்கு ஒன்றிய நரேந்திர மோடி அரசு ஏற்கெனவே 5  சதவிகித ஜிஎஸ்டி வரி விதித்திருந்தது. எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட தவிட்டுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில்தான், ‘எண்ணெய் எடுக்கப்பட்ட தவிடு மீதும் 5 சதவிகித ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைத்து நிதியமைச்சகத்துக்கு தாங்கள் கடிதம் எழுதியுள்ளதாக ஒன்றிய உணவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். “எண்ணெய் எடுக்கப்படாத தவிட்டை, எண்ணெய் எடுக்கப்பட்ட தவிடு என்று கூறி  வரி ஏய்ப்பு செய்வதுடன், இந்த தவிடு பெரும் பாலும் கால்நடைகளுக்கே உணவாக பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் எடுக்கப் பட்ட தவிடு மீதும் வரி விதிக்கப்பட்டால், எண்ணெய் எடுக்காமல் தவிடு விற்பனை செய்யப்படுவது குறையும். அரசுக்கும் வரு வாய் கிடைக்கும். இப்போது நாட்டில் கிடைக்கும் தவிட்டில் 60 சதவிகிதம் மட்டுமே எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படுகிறது. வரி விதிக்கப்பட்டால் இந்த அளவு அதி கரிக்கும். இதன் மூலம் சமையல் எண் ணெய் இறக்குமதி செய்வதைக் குறைக்க முடி யும்” என்றும் சுதான்ஷு பாண்டே கூறியுள்ளார்.