states

img

புகைக்குண்டு வீசிய சம்பவத்தில் 5 பேர் கைது: 4 பேர் மீது ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

புதுதில்லி, டிச. 14 - நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டு களை வீசிய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், ஒருவர் தேடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. குண்டுவீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மனோ ரஞ்சன் (33), சாகர் சர்மா (23), அமோல் ஷிண்டே (26) ஆகிய 3 இளைஞர்கள் மற்றும் நீலம் ஆசாத் (37) என்ற ஒரு பெண் என்பது அடையாளம் காணப் பட்டது. அவர்கள் உடனடியாக கைது செய்யப் பட்டனர்.  இவர்களுக்கு உதவியதாக குர்கானைச் சேர்ந்த விஷால் சர்மாவையும் போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரான லலித் ஜா என்பவரைத் தேடி வருகின்றனர்.  இதனிடையே, கைது செய்யப்பட்ட 5 பேரிடம் நடத்திய விசாரணையில், “விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் கலவரம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்களால், ஒன்றிய அரசின் மீது தங்கள் அனைவருக்கும் அதிருப்தி நிலவியதாக வும், அரசுக்கு ஒரு செய்தியை வழங்கவே இந்தத் தாக்குதலை நடத்தினோம்’’ என்று அவர்கள் தெரி வித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, பகத்சிங் பெய ரிலான சமூகவலைத்தள குழு மூலம் அறிமுகமான இவர்கள் 6 பேரும் கடந்த சில நாட்களாக இந்தத் தாக்குதலுக்காக திட்டமிட்டு வந்துள்ளனர். அதன டிப்படையில், மனோரஞ்சன், மைசூரு தொகுதி பாஜக  எம்.பி. பிரதாப் சிம்ஹாவிடமிருந்து, நாடாளு மன்றத்தில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்றுள்ளார். சாகர் சர்மாவையும் தன் நண்பர் என்று அறிமுகப்படுத்தி அழைத்து வந்துள்ளார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, கல்யாண் பகுதியில் இருந்து 5 புகைக் குண்டுகளை ரூ.1200-க்கு வாங்கிக் கொண்டு தில்லிக்கு வந்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்பு குரு கிராமில் உள்ள விஷால் சர்மாவின் வீட்டில் அனைவரும் தங்கியுள்ளனர். நாடாளுமன்றத்துக் குள் செல்ல லலித்துடன் சேர்த்து 6 பேரும் விரும்பி னாலும் 2 அனுமதிச் சீட்டு மட்டுமே கிடைத்ததால் மனோரஞ்சனும், சாகரும் நாடாளுமன்றத்துக்குள் சென்றுள்ளனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த நீலம் ஆசாத்தும், அமோல் ஷிண்டேயும் புகைக் குண்டு களை விசியுள்ளனர். லலித் அதனை செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. மேலும் மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் ஷிண்டே, நீலம் ஆசாத் ஆகிய 4 பேரின் செல்போன்களுமே லலித் ஜாவிடம்தான் இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தற்போது தேடி வருகின்றனர். 4 பேர் மீது ‘உபா’ சட்டம் நாடாளுமன்ற மக்களவைக்கு உள்ளும், நாடாளுமன்ற வளாகத்திலும் வண்ணப் புகைகளை கக்கும் குண்டுகளை வீசிய சம்பவத்தில், மனோ ரஞ்சன் (33), சாகர் சர்மா (26), அமோல் ஷிண்டே (25) ஆகிய 3 இளைஞர்களும், நீலம் ஆசாத் (37) என்ற இளம்பெண்ணும் கைது செய்யப்பட்ட நிலை யில், அவர்கள் மீது ‘உபா’ எனும் சட்டவிரோத நடவ டிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளில் வழக்கு

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (கல வரத்தை தூண்டுதல்), பிரிவு 120-பி (குற்றச் சதியில் ஈடுபடுதல்), பிரிவு 452 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 186 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), பிரிவு 353 (அரசு ஊழியரைத் தாக்கி பணிசெய்ய விடாமல் தடுத்தல்) ஆகிய பிரிவுகள் மற்றும் ‘உபா’ சட்டம் பிரிவு 16 மற்றும் 18 ஆகிய பிரிவு களின் கீழ் நாடாளுமன்ற காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

8 ஊழியர்கள் சஸ்பெண்ட்

அதேபோல புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடந்த இந்த அத்துமீறலுக்கு பாது காப்புக் குறைபாடுதான் காரணம் என தெரிய வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக 8 பணியா ளர்களை இடைநீக்கம் செய்து மக்களவைச் செயல கம் வியாழனன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரன் என ஆகிய எட்டு பேர் என்பது தெரியவந்துள்ளது.