புதுதில்லி, மார்ச் 5- நாட்டின் கச்சா எண்ணெய் தேவை யில் 85 சதவிகிதத்தை வெளிநாடுகளில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அந்த வகையில், நடப்பு 2021-22 நிதி யாண்டின் முடிவில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏழரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று பெட்ரோலிய அமைச்சக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2021-22 நிதியாண்டு முடிவில் அது இருமடங்காக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2021 ஏப்ரல் முதல் 2022 ஜனவரி வரையிலான, 10 மாதங்களில் இந்தியா 7 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய்யை இறக்கு மதி செய்திருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஜனவரி முதல் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கிய நிலையில், 2022 ஜன வரி மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா கச்சா எண்ணெய் யை இறக்குமதி செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் இது 58 ஆயிரம் கோடி யாக இருந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டு மின்றி கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை பெட்ரோலிய பொருட்கள் வகையிலும் 3 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி நடைபெற்றுள்ளதாக பெட்ரோலிய அமைச்சக புள்ளிவிவரம் கூறியுள்ளது. கச்சா எண்ணெய்த் தேவையில் இந்தியா கடந்த 2019-20 நிதியாண்டில் 15 சதவிகிதத்தை உள்நாட்டிலேயே உற் பத்தி செய்தது. 2020-21 நிதியாண்டில், இது 15.6 சதவிகிதமாக அதிகரித்த நிலை யில், நடப்பு நிதியாண்டில் அது 14.9 சத விகிதமாக குறைந்துள்ளது.