புதுதில்லி, ஜூன் 17 - ராணுவ ஆட்சேர்ப்பில் காண்ட்ராக்ட் முறையை புகுத்தும் மோடி அரசின் ‘அக்னிபாத்’ (‘Agnipath’ Recruitment Scheme)திட்டத்திற்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுக்க ஆரம்பித்துள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரி யானா, ஜம்மு - காஷ்மீர் என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளிக்கிழமையன்றும் ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் ரயில் மற்றும் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தினர். பீகார் மாநிலத்தில் வியாழ னன்று சாப்ரா, பாபுவா ரயில் நிலை யங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரயில்கள் தீ வைத்த எரிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக் கிழமையன்று மொஹியுதி நகர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டி ருந்த ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில், ரயில் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. பெகுசராய் மாவட்ட ரயில் நிலையத்தில் திரண்ட மாணவர்கள் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும், சஹஸ்ரா தார்பங்கா பயணிகள் ரயிலுக்கும் தீ வைத்தனர். இதேபோல பீகாரின் சமஸ்திபூரில் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதுடன் ஆரா ரயில் நிலையமும் இளைஞர்களால் சூறையாடப்பட்டது.
பக்சர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலை யத்தை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தண்ட வாளத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். வியாழனன்று பீகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் அடையாளம் தெரி யாத நபர்களால் தீ வைத்து எரிக்கப் பட்டது. அட்டாவா சாலையில் அமைந் துள்ள பாஜக கட்சி அலுவல கத்திற்குள் டயர்களை வீசி தீவைக்கப்பட்டது. வெள்ளிக்கிழ மையன்று லக்கிசராய் மாவட்டத் திலுள்ள பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடந்தது. அதேபோல நவாடாவில் பாஜக எம்எல்ஏ அருணா தேவியின் கார் மீதும் போராட்டக் காரா்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினா். அதில், அவருக்கு காயம் ஏற்பட்டது. ஓட்டுநா் உள்பட உடனி ருந்த 5 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பேட்டி அளித்த பாஜக எம்எல்ஏ அருணா தேவி, “காரில் இருந்த பாஜக கொடி யைப் பார்த்து போராட்டக்காரா் களுக்கு கோபம் வந்திருக்கலாம். அவா்கள் கொடியைக் கிழித்ததுடன் கார் மீது கற்களை வீசினா். அதில், எனது பாதுகாவலா்கள் இருவா், செயலா்கள் இருவா், ஓட்டுநா் ஆகியோர் காயமடைந்தனா்’’ என்று கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சஹா் மாவட்டத்தில் உள்ள குா்ஜா பகுதியில், அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஏராளமானோர் வெள்ளிக்கிழமை யன்று போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் அவா்களின் கோரிக்கை சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப் படும் என்று உறுதியளித்தனா். பல்லியா மாவட்ட ரயில் நிலை யத்தில் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டதாக தெரிகிறது. கோத்வாரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட வந்தவா்களை அதிகாரிகளே சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். தெலுங்கானா மாநிலம் செகந்திரா பாத் ரயில் நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமையன்று நுழைந்த இளைஞர்கள் ரயில் நிலையத்தை சூறையாடினர். பொருட்களை தீயிட்டு கொளுத்தி ரயில்வே தண்ட வாளங்களில் வீசினர். ரயில் நிலைய கடைகளையும் சூறை யாடினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த வர்கள் அனைவரும் தெலுங்கானா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த ஏராளமானோர், ஜோத்பூா், சிகார், ஜெய்ப்பூா், அஜ்மீா், ஜுன்ஜுனு ஆகிய மாவட்டங்களில் ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக் கட்சியினருடன் (ஆா்எல்பி) இணைந்து போராட்டத் தில் ஈடுபட்டனா். ஜெய்ப்பூரில் நடந்த போராட்டத்தில் ஆா்எல்பி எம்.பி. ஹனுமான் பெனிவால் கலந்து கொண்டார். ஹரியானா மாநிலம் பல்வால் நகரை முற்றுகையிட்ட ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்கள், துணை கமிஷ்னர் அலுவலகம் மற்றும் அங்கிருந்த குடியிருப்பு களைத் தாக்கினர். போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்- போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக வும் கூறப்பட்டது.
இதனிடையே, வெள்ளியன்று ஹரியானா மாநிலம் குருகிராமில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஹரியானாவின் குருகிராம் நகரம் தில்லி, ஹரியானா எல்லை யில் உள்ளது. இங்கு தொழிற்பேட்டை கள் அதிகம் இருப்பதால், அசம்பா விதம் ஏற்படாமல் தடுக்க தடை உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது. ஹரியானா வின் பரிதாபாத் பால்பாகரில் இணை ய சேவைகள் துண்டிக்கப்பட்டன. ஜம்முவில் பத்திரிகையாளா் மன்றம் அருகே திரண்ட நூற்றுக் கணக்கான இளைஞா்கள், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினா். போராட்டத்தில் ஈடுபட்ட முனீஷ் சா்மா என்பவர் கூறுகையில், “எங்களில் பலா், ராணுவத்தில் சோ்வதற்காக உடல் தகுதித் தோ்வு, மருத்து வப் பரிசோதனை தோ்வு ஆகிய வற்றை முடித்துள்ளோம். கடந்த ஆண்டு எழுத்துத் தோ்வு நடைபெற விருந்த நிலையில் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது எங்கள் நியமன நடைமுறை செல்லாது, புதிதாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டிருக்கிறது. எங்கள் இரண்டு ஆண்டு கால முயற்சி வீணாகிவிட்டது. எங்கள் எதிர்காலத்துடன் அரசு விளையாடு கிறது” என்று குற்றம் சாட்டினார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான இந்த போராட்டத்தால், நாடு முழுவதும் வெள்ளியன்று 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும் 35 ரயில்கள் ரத்து செய்யப் பட்டன. 13 ரயில் சேவைகள் பாதி யில் நிறுத்தப்பட்டன. வடக்கு ரயில்வே நிர்வாகமானது ஹவுரா- புதுதில்லி பூர்வா எக்ஸ்பிரஸ்; ஹவுரா- லால்குவான் எக்ஸ்பிரஸ்; ராஞ்சி-பாட்னா பாடலி புத்ரா எக்ஸ்பிரஸ்; தனாபூர்- டாடா எக்ஸ்பிரஸ், ஹவுராவ்- தன்பாத் பிளாக் டைமண்ட் எக்ஸ்பிரஸ்; அசன்சோல்- டாடா எக்ஸ்பிரஸ்; ஜெயநகர்- ஹவுரா எக்ஸ்பிரஸ், மால்டா டவுன் - கியூல் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்தது.