states

img

பாடப் புத்தகங்களில் இருந்து தங்கள் பெயரை நீக்கக்கோரி 33 கல்வியாளர்கள் கடிதம்

புதுதில்லி, ஜூன் 18- என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் இருந்து மேலும் 33 கல்வியாளர்கள் தங்கள் பெயர்களை நீக்கக் கோரி யுள்ளனர். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) “கல்வி தேசியமயமாக்கல்” என்ற பெயரில் அரசாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பகுத்தறிவு அற்ற முறையில் அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் பல பகுதிகளை நீக்கியுள்ளது.பாட நூல் மேம்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்த அரசியல் அறிவியல் பாடத்திட்ட தயாரிப்பாளர்களான சுஹாஸ் பால்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகி யோர் புத்தகத்தில் இருந்து தங்கள் பெய ரை நீக்கிவிட வலியுறுத்தி குழுவில் இருந்து இம்மாதம் விலகினர். இதைத் தொடர்ந்து தற்போது 33 கல்வி யாளர்கள் தங்கள் பெயரை நீக்கக்கோரி உள்ளனர். பகுத்தறிவு என்ற பெயரில் என்சிஇ ஆர்டி யின் இந்த பாடத் திட்ட நீக்கம் ஆக்கப்பூர்வமான கூட்டு முயற்சி யை சிதைத்துள்ளது என என்சிஇ ஆர்டி இயக்குனர் தினேஷ் சல்கானிக்கு எழுதிய கடிதத்தில், கல்வியாளர்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி யுள்ளனர். ஆளும் அரசிற்கு ஏற்றுக் கொள்ள முடியாத பகுதிகளை வெட்டி நீக்குகிறது. இந்த நீக்கத்தில் எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

புத்தகங்களில் இருந்து இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்து காந்தியின் பார்வை, அதைத் தொடர்ந்து இந்து தீவிரவாதிகளால் காந்தி படுகொலை செய்யப்பட்டது, ஆர்எஸ்எஸ் மீதான தடை, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை என்சிஇஆர்டி நீக்கியது.  மேலும், பாஜக ஆட்சியில் குஜ ராத்தில் நடைபெற்ற வன்முறை குறித்தான பகுதிகளும் நீக்கப்பட்டு, ஆர்எஸ்எஸ்க்கு சாதகமான பாடத்திட்ட மாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. பாடப்பகுதி நீக்கத்தினால் புத்தகம் உருவாக்க கொடுக்கப்பட்ட கூட்டு  முயற்சி தற்போது வீணாக்கப்பட்டுள் ளது என்றும் கல்வியாளர்கள் தெரி வித்து உள்ளனர்.அக்கடிதத்தில் முன்னாள் ஜவஹர்லால் நேரு பேராசிரி யரும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணை டீனு மான காந்தி பிரசாத் பாஜ்பாய், பிரதாப் பானு மேத்தா, அசோகா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்- ராஜீவ் பார்கவா, சிஎஸ்டிஎஸ்(CSDS)-இன் முன்னாள் இயக்குநர் நிரஜா கோபால் ஜோயல், முன்னாள் ஜேஎன்யு பேராசிரியர் நிவேதிதா மேனன், ஜேஎன்யு பேராசிரியை விபுல் முத்கல், சிவில் சமூக கண்காணிப்பு பொது காரணத்தின் தலைவர் கீதம் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கே.சி.சூரி மற்றும் இந்திய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் (ஐஐஏஎஸ்) முன்னாள் இயக்குநர் பீட்டர் ரொனால்ட் டிசோசா உள்ளிட்ட முக்கிய பேராசிரியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.