புதுதில்லி, ஜன.4- நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பதிவாகும் பல்வேறு குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவண அமைப்பு (என்சிஆர்பி) ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்த வகையில் 2018- இல் 232 வழக்குகளும் 2019-ஆம் ஆண்டில் 306 ஆகவும் இருந்துள் ளது. 2020-ஆம் ஆண்டில் 1,102 ஆகவும் உயர்ந்தது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த 2020 ஆம் ஆண்டில் பதிவான குழந்தை களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளி யிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் குழந்தை களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக 116 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் குற்றவாளி என அறிவிக்கப்பட் டுள்ளார். மகாராஷ்டிராவில் 2020-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 207 வழக்குகள் பதிவாகி உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 2020இல் 197 வழக்குகளும் கர்நாடகா 144, கேரளா 126, ஒரிசா 71, ஆந்திரா (52) என்ற அளவில் மாநிலங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.