states

மத்திய பல்கலைக் கழகங்களில் 24 மாணவர்கள் தற்கொலை

புதுதில்லி, ஏப்.4-  2017 ஆம் ஆண்டு முதல் 2022  ஆம் ஆண்டு வரை மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் மக்கள வையில் திங்களன்று தெரிவித்தார். மாணவர்களின் துன்புறு த்தல் மற்றும் பாரபட்சமான சம்ப வங்களைத் தடுக்க ஒன்றிய அர சும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வும்  பல முயற்சி களை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.  அமைச்சரின் பதிலைத் தொடர்ந்து பேசிய  பகுஜன் சமாஜ்  கட்சி உறுப்பினர் டேனிஷ் அலி,  நாட்டில் உள்ள தனியார் பல்கலைக் கழகங்களில் நடக்கும் தற்கொலைகள் தொடர்பாக தாம்  எழுப்பிய கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.