புதுதில்லி, பிப்.19- பொதுத்துறை நிறுவனமான ‘ஓஎன்ஜிசி’ எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation - ONGC) தனது 2021-22 நிதியாண் டின் அக்டோபர் - டிசம்பர் வரை யிலான மூன்றாவது காலாண்டுக் கான நிதி நிலை முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில், ஓஎன்ஜிசி நிறுவனம் 2021-22 டிசம்பர் காலாண்டில் ரூ. 11 ஆயிரத்து 636 கோடியே 67 லட்சத்தை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது முந்தைய (2020) ஆண்டின் டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 219.33 சத விகிதம் - அதாவது, 2 மடங்கிற்கும் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ. 3 ஆயிரத்து 637 கோடியே 28 லட்சத்தை ஈட்டியிருந்தது. இது 2021 டிசம்பர் காலாண்டில் ரூ. 11 ஆயிரத்து 636 கோடியே 67 லட்சமாக அதிகரித்துள்ளது. 2021 டிசம்பர் காலாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் மொத்த வருவாயாக ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்தை ஈட்டியுள்ளது. இதுவும் 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் மொத்த வரு வாயாக ரூ. 1 லட்சத்து 02 ஆயிரம் கோடி மட்டுமே ஈட்டியி ருந்தது. 2021 டிசம்பர் காலாண்டில் இது சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், ஓஎன்ஜிசி நிறுவனம் மொத்த வருவாயாக ரூ. 1 லட்சத்து 23 ஆயிரம் கோடியை ஈட்டி யிருந்தது. தற்போது அதுவும் மூன்றாவது காலாண்டில் சுமார் 24 ஆயிரம் கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது. 2021 டிசம்பர் காலாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மொத்த செலவினமும் 37 சதவிகிதம் உயர்ந்து ரூ. 1 லட்சத்து 32 ஆயி ரம் கோடியாக அதிகரித்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனம் 2021-22 நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு1 ரூபாய் 50 காசுகளை இரண்டாவது இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.