states

மணிப்பூரில் இன்று சட்டமன்றத் தேர்தல் குண்டுவெடித்து 2 பேர் பலி - வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

இம்பால்,பிப்.27-    60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28 திங்களன்று நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கேங்க் பிமுல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பிப்ரவரி 26 சனிக்கிழமையன்று இரவு குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 6 வயதான மங்மின்  லால், 22 வயதான லாங்இன்சாங் ஆகிய 2 பேர்  சிகிச்சை பலனின்றி இறந்தனர். 5 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு ஆயுதம் தாங்கிய குழுவான குக்கி கூட்ட மைப்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள் ளது. இதனால் மணிப்பூர் தேர்தலில் பயங்கர வாதிகளின் ஆதிக்கம் நிலவுகிறது.  பாஜக வுக்கு குக்கி இனத்தவர் வாக்களிக்கா விட்டால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று  குக்கி கூட்டமைப்பு எச்சரித்துள் ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் வேட்பாளர் வாங்லிம்பாம் ரோஹித் சிங்  என்பவர்  மீது  சனிக்கிழமை யன்று இரவு துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டுள் ளது. இவர் கஷெட்ரியாகோ சட்டசபை தொகு தியில்  போட்டியிடுகிறார். இச்சம்பவத்துக்கு ஜேடியூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.