புதுதில்லி,மார்ச் 15- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், ஹோலி பண்டிகையையொட்டி, மார்ச் 17 மற்றும் மார்ச் 18 ஆகிய இரு நாட்கள் மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல, மக்களவை கூட்டத்தொடருக்கும் மேற்கண்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19 மற்றும் மார்ச் 20 ஆகிய தேதிகள் வார இறுதி நாட்களால் என்பதால், மார்ச் 17 தொடங்கி மார்ச் 20 வரை தொடர்ந்து 4 நாட்கள் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் விடுமுறை ஆகும்.