states

img

நிருபர்களின் ஆடைகளைக் களைந்து 18 மணிநேரம் சித்ரவதை!

போபால், ஏப்.9- பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர் உள்ளிட்ட 8 பேரை, ஆடைகளை களைந்து, உள்ளாடையுடன் நிற்க வைத்து, துன்புறுத்திய சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. ம.பி. மாநிலத்தில், பாஜக எம்எல்ஏ வாக இருப்பவர் கேதார்நாத் சுக்லா  மற்றும் அவரது மகன் குரு தத் சுக்லா  ஆகியோர் குறித்து, இந்திராவதி நாடகப் பள்ளியின் இயக்குநர் நீரஜ் குந்தர், போலி முகநூல் ஐடி மூலம் அவதூறு கருத்துகளை வெளி யிட்டதாக புகார் எழுந்தது. இந்த விவ காரத்தில், எம்எல்ஏ புகாரின் பேரில் நீரஜ் குந்தர் கைது செய்யப்படவே, அதைக் கண்டித்து மத்தியப் பிர தேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற் றது. இந்தப் போராட்டத்தை உள்ளூர் நிருபரும், யூடியூபருமான கனிஷ்கா திவாரியும், கேமிராமேனுடன் சென்று படம் பிடித்துக் கொண்டு இருந்துள் ளார்.  அப்போது அங்கு வந்த போலீசார், கனிஷ்கா திவாரி, அவரது கேமிரா மேன், நாடகக் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா-வுக்கு எதிராக ஏன் தொடர்ந்து வெளியிடுவது ஏன்? என்றும் போலீசார் கேட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், 8 பேரையும், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆடைகளை களையச் சொல்லி, வெறும் உள்ளாடையுடன் 18 மணி  நேரம் காவலில் நிற்க வைத்துள்ள னர். மேலும், 8 பேரும் உள்ளாடைகளு டன் நிற்கும் கோலத்தை அங்கிருந்த காவல் துறை பொறுப்பாளர் அபிஷேக் சிங் பரிஹார் மூலம் புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படத்தை சமூகவலைதளங்களிலும் வெளியிட் டுள்ளனர். இனியும் எம்எல்ஏ-வுக்கு எதி ராக செய்திகளை வெளியிட்டால் உடம்பில் ஒரு துணி கூட இல்லாமல் ஓட வைத்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதே போல, ஒடிசாவின் பாலா சோர் மாவட்டத்திலும் ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் லோக்நாத் டாலெய் என்பவரை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கி, சுயநினைவில்லாத நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும், மருத்து வமனையில் அவரை கட்டிலுடன் சேர்த்து விலங்கிட்டுள்ளனர். இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் கண்டனம் இந்த இரு சம்பவங்களும் அதிர் வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் (The Editors Guild of India) கண்ட னம் தெரிவித்துள்ளது. “மத்தியப் பிர தேசம் மற்றும் ஒடிசாவில் பத்திரிகை யாளர்களுக்கு எதிராக நடந்த அத்து மீறல்கள் கவலை அளிக்கின்றன. ஜன நாயக மதிப்பீடுகள் மற்றும் பத்தி ரிகை சுதந்திரத்தை மதிக்குமாறு அனைத்து விசாரணை அமைப்பு களுக்கும், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்” என்று பத்திரிகையாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.