states

மின் விபத்துகளால் 17,781 பேர் பலி

புதுதில்லி,மார்ச் 27- நாடு முழுவதும் கடந்த மூன்றா ண்டுகளில் மின் விபத்துகளால் 17,781 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய  மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார் மின்கசிவு காரணங்களால் கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்ட  மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் குறித்து மாநிலங்க ளவையில் திமுக எம்.பி. கனி மொழி சோமு கேள்வி எழுப்பி னார். இதற்கு மின்துறை அமைச்சர்  ஆர்.கே.சிங் அளித்த பதிலில், “இந்தியாவில் கடந்த மூன்றாண் டுகளில் மின் உற்பத்தி நிலை யங்கள், மின்பகிர்மானப் பிரிவு கள், தொழிற்சாலைகள் மற்றும்  வீடுகளில் ஏற்பட்ட மின்விபத்து கள் பற்றிய தரவுகளை ஒன்றிய அரசு திரட்டியுள்ளது. அதன்படி நாட்டில் ஆறு மண்டலங்களாக உள்ள மின்பகிர்மான நிர்வாகத் தில் 2018-19 ஆம் ஆண்டில் 6,646  பேரும், 2019-20 ஆம் ஆண்டில்  5515 பேரும், 2020-21 ஆம் ஆண்டில்  5,620 பேரும் என  மொத்தம் கடந்த  மூன்றாண்டுகளில் 17,781 பேர்  மின்சார விபத்துகளால் உயிரி ழந்துள்ளனர்.  இதுதவிர பல்லாயி ரக்கணக்கான விலங்கினங்களும் உயிரிழந்துள்ளன. பொருட் சேதம் பற்றிய கணக்கீடு ஒன்றிய அரசிடம் இல்லை. மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் பிரத்யேகக் கருவி களும் இந்திய சட்டங்களின்படி யும் சர்வதேசத் தரத்தின்படி யும் தயாரிப்பதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மத்திய மின்சார ஆணைய விதிமுறைகளின்படி மின்சாரக் கசிவு அல்லது எர்த்  குறைபாடு ஏற்பட்டால் மின்விநி யோகம் தானாகவே துண்டிக்கப் படும் வகையிலான மின் சாதனங் களை வீடுகள் மற்றும் தொழிற்சா லைகளில் அமைப்பதும் உறுதி செய்யப்படுகிறது. அதற்கேற்ப மாநில மின்சார வாரியங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப் படுகின்றன” என்று தெரிவித்தார்.