விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்திருக்கும் ‘குலத் தொழில்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்யப் பட்டிருப்பதாக ஒன்றிய பாஜக அரசு தெரிவித்துள்ளது. தச்சர், செருப்பு தைப்பவர், படகு கட்டுபவர், பொற்கொல் லர், பொம்மை தயாரிப்பவர், துணி துவைப்பவர், தையல் தொழில் செய்பவர், குயவர், மீன்பிடி வலை செய்பவர், சிற்பி உள்ளிட்ட 18 வகையான தொழில் களை பரம்பரை பரம்பரையாக செய்து வருபவர்கள், அந்த தொழிலை விரிவுபடுத்த கடனு தவி அளிப்பதே விஸ்வகர்ம யோஜனா திட்டமாகும். இதற்கு உடனடியாக கடும் எதிர்ப்பு எழுந்தது. பிற்படுத்தப் பட்டவர்கள், பட்டியல் வகுப்பி னர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் தற்போதுதான் முதல் தலைமுறையாக கல்லூரி கல்வியைப் பெற்று, மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என்று மாறிவரும் நிலையில், அவர்களை மீண்டும் துணி துவைக்கவும், செருப்பு தைக்க வும் தள்ளிவிடும் முயற்சி என்று குற்றச்சாட்டு எழுந்தது. எனி னும், மோடி அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் வரை கோயம்புத்தூர் மாவட்டத் தில் 5510 பேரும், ஈரோடு மாவட் டத்தில் 1568 பேரும், புதுக் கோட்டை மாவட்டத்தில் 2287 பேரும், ராமநாதபுரம் மாவட்டத் தில் 1282 பேரும் இத்திட்டத்தில் பயன்பெற பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 384 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 1286 பேரும், விருதுநகர் மாவட்டத் தில் 1894 பேரும் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.