புதுதில்லி, மார்ச் 2- ‘நைட் பிராங்க்’ (KNIGHT FRANK) என்பது லண்டனைத் தலைமையிட மாகக் கொண்ட உலகளாவிய குடி யிருப்பு மற்றும் வணிக சொத்துக்கள் தொடர்பான ஆலோசனை நிறுவன மாகும். இந்நிறுவனம் 2022-ஆம் ஆண்டுக் கான செல்வ அறிக்கையை (The Wealth Report 2022) தற்போது வெளியிட்டுள் ளது. அதில், உலகில் அதிகமான கோடீஸ் வரர்களைக் கொண்ட 3-ஆவது நாடு இந்தியா என்பது தெரியவந்துள்ளது. உலகில், சுமார் 226 கோடி ரூபாய்க் கும் (30 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகமான சொத்து வைத்திருப்பவர் களின் பட்டியலை ‘நைட் பிராங்க்’ தயா ரித்துள்ளது. இதில், 2021-ஆம் ஆண் டில் உலகில் 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள னர். இதில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டி யலில் இணைந்துள்ளனர்.
அதாவது உலகளவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டி லும் 9.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மட்டும் 13 ஆயிரத்து 637 பெரும் பணக் காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள னர். 2020-ஆம் ஆண்டில் இது 12 ஆயி ரத்து 287 ஆக இருந்த நிலையில், தற்போது, இந்த எண்ணிக்கை 11 சத விகிதம் அதிகரித்துள்ளது. இது, ஆசிய பசிபிக் அளவில் (APAC) மிக உயர்ந்த சதவிகித வளர்ச்சி என்று கூறப்பட்டுள்ளது. பெங்களூரு விலிருந்து மட்டும் 352 பேரும், தில்லி யிலிருந்து 210 பேரும், மும்பையிலி ருந்து 159 பேரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதிக பெரும்பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெ ரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந் நாட்டில் 748 கோடீஸ்வரர்கள் உள்ள னர். 554 கோடீஸ்வரர்களுடன் சீனா 2-ஆவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 145 கோடீஸ்வரர் களுடன் இந்தியா உள்ளது. இந்தியா வில் உள்ள கோடீஸ்வரர்களில் 69 பேரின் சொத்து மதிப்பு 2022-ஆம் ஆண்டில் 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட் டுள்ளது. உலக கோடீஸ்வரர்களில் 36 சத விகிதம் பேர் ஆசிய கண்டத்தில் உள் ளது குறிப்பிடத்தக்கது.