states

ஐஐடி, ஐம்எம்எம் உயர்கல்வி நிறுவனங்களில் படித்த 122 மாணவர்கள் தற்கொலை

புதுதில்லி, டிச.21- நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் உயர் கல்வி  நிலையங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 24 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு  மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 47 பேர்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் பழங்குடியினர். சென்னை ஐஐடி தொடங்கி நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன்காரண மாக மாணவர்களின் தற்கொலை தொடர்கதை யாகி வருவதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. உயர் கல்வி நிலையங்களில் சிறுபான்மை யினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் தற்கொலை விவ ரங்களை வழங்குமாறு மக்களவையில் நாமக்கல் தொகுதி உறுப்பினர் சின்ராஜ் கேட்டிருந்தார். மேலாண்மை கல்வி நிறுவனமான ஐஐஎம்மில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறு வனத்தில் ஒன்பது மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. என்ஐடி என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த ஏழு ஆண்டு களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 11  மாணவர்கள், பட்டியலின பிரிவைச் சேர்ந்த 6  மாணவர்கள் உள்பட 30 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  அதே போல, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் 37 மாணவர்களின் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.