பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் 11 பேர் பலி; 7 பேர் கவலைக்கிடம்
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள தால் கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஆகியோர் தலைமை யில் பெங்களூரு எம்.ஏ.சின்னசாமி திடலில் புதன்கிழமை அன்று மாலை பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து புதன் கிழமை அன்று மாலை ரசிகர்கள் பலர் சின்னசாமி திடலில் அத்து மீறி நுழைய முயன்றனர். காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர். அதன் பின்னர் பெங்களூரு அணியின ரைப் பார்ப்பதற்காக மரங்கள் மற் றும் உயரமான சுவர்கள் மீதும், கட்ட டங்கள் மீதும் ரசிகர்கள் ஏறியதா லும் அந்தப் பகுதி மிகுந்த பரபரப் பாக காணப்படுகிறது. மேலும் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற் பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த னர். காயமடைந்த பலர் வைதேகி மற்றும் சிவாஜி நகர் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், இரவு 7 மணி நில வரப்படி சின்னசாமி திடலில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி யுள்ளனர் என்றும், வைதேகி மற்றும் சிவாஜி நகர் மருத்துவமனைகளில் 7 பேர் கவலைக்கிடமாக இருப்ப தாகவும், 6 வயது சிறுமி உட்பட 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மெட்ரோ மூடல் சின்னசாமி திடல் நோக்கி மக் கள் அதிகம் செல்வதை தடுக்க கப்பன் பூங்கா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மெட்ரோ நிலை யம், விதான சவுதா ஆகிய இடங்க ளில் மெட்ரோ ரயில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டார் துணை முதலமைச்சர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர் பாக கர்நாடக துணை முதலமைச் சர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “காவல்துறையைக் குறை சொல் லாதீர்கள். கூட்டம் யாராலும் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அதிக மாக இருந்தது. இருந்தாலும் இந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் கூறினார்.