இந்திய மார்க்சிய இயக்கத்தின் மகத்தான தலைவரும், மேற்குவங்கத்தின் தவப்புதல்வரும், நீண்டகாலம் முதல்வராக பணியாற்றியவருமான தோழர் ஜோதிபாசுவின் 109 ஆவது பிறந்த நாள் விழா கட்சியின் மேற்குவங்க மாநிலக் குழு சார்பில் கொல்கத்தாவில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. அதில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.