states

img

ரூ. 2.70 லட்சம் அள்ளிக் கொடுத்த போக்குவரத்து அரங்கத் தோழர்கள்

திண்டுக்கல், அக்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து அரங்க அரசியல் பயிற்சி  வகுப்பு, வெள்ளியன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.  “தொழிலாளர் வர்க்கத்தை திரட்ட, வாசிப்போம்” என்ற தலைப்பில் நடை பெற்ற இந்த பயிற்சி முகாமில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேருந்தின் நெரிசலில் டிக்கெட் கிழித்  துக் கொடுக்கும் நடத்துநர்கள் மற்றும் சாலையில் முழு கவனம் செலுத்தி பய ணிகளைப் பத்திரமாய் கொண்டு சேர்க்கும் ஓட்டுநர்கள், பேருந்துகளின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் தொழி லாளர்கள்- கடுமையான பணிச் சூழலை  எதிர்கொண்டாலும், நூல்கள் வாசிப்பில்  கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கா கவே இப்பயிற்சி வகுப்பு நடைபெற் றது. பொதுவாக ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவே தொழிலாளர்கள் - தொழிற்சங்கங்களின் கூடுகை இருக்  கும்.

ஆனால், அதற்கு மாறாக, ‘வாசித்த லின் அவசியம்’ குறித்து பேசுவதாக பயிற்சி வகுப்பு அமைந்திருந்தது. போக்குவரத்துப் பணியும் அதன் சூழலும் எளிதானதல்ல. அவர்கள் உறங்குவதற்கான நேரம்கூட மிகக்  குறைவாகவே கிடைக்கும். குடும்பத்  தில் குழந்தைகளோடு இருக்கும் நேர மும் குறைவுதான். உடல்சோர்வுக்கு மத்தியில் ஏதாவது வாசிக்கலாம் என  செய்தித்தாளை புரட்டினாலே எங்கி ருந்தோ வரும் தூக்கம் இமைகளின் மீது  வந்தமரும். இதில் எங்கே நூல் வாசிக்க?  என்ற கேள்விக்கு மத்தியில், “வாசித் தல் என்பது நமது இயல்பான நட வடிக்கைகளில் ஒன்றாக மாற்றப்பட  வேண்டும்” என்று தொழிற்சங்கத் தலை வர் தோழர் அ. சவுந்தரராசன் உரையாற் றினார். “இப்பயிற்சி முகாமிலிருந்து வாசிப்பு பயணம் தொடங்க வேண்  டும்” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் போக்குவரத்து அரங்க  உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார். இப்பயிற்சி முகாமில் இலக்கிய மாத  இதழான ‘செம்மலரு’க்கு 1000 சந்தாக்க ளைச் சேகரித்து, அதற்கான தொகை ரூ.  2 லட்சத்து 70 ஆயிரத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ. சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், கே. பால பாரதி ஆகியோரிடம், ஆறுமுக நயி னார், ஜி. வெங்கிடுசாமி, வித்யானந் தன், இராமநாதன் உள்ளிட்டோர் வழங்கி னர். முன்னதாக சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி துவக்க உரையாற்றினார்.