புதுதில்லி, பிப்.5- பாதுகாப்புத்துறையில் 100 சதவீத அந் நிய முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள் ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நட ராஜன் கேட்டிருந்த கேள்விக்கு இணைய மைச்சர் அஜய்பட் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது பி.ஆர். நடராஜன், பாதுகாப்புத்துறை யில் இறக்குமதி செலவுகளைக் குறைக்க வும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வும் அரசு கொள்கை முடிவுகள் எதுவும் எடுத்திருக்கிறதா, அதன் விவரங்கள் என்ன, பாதுகாப்புத்துறையில் அந்நிய மற்றும் உள் நாட்டுத் தனியார் முதலீடுகள் அனுமதிக் கப்பட்டிருக்கிறதா, விவரங்கள் என்ன என் றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த பாது காப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட், இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை வரும் வருடங்களில் குறைப்பதற்காக, பாது காப்பு கருவிகளின் உற்பத்தி மற்றும் மேம் பாடு, உள்நாட்டு வடிவமைப்பு ஆகிய வற்றை ஊக்குவிக்க பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து கடந்த சில வருடங்களாக பல கொள்கை முன்னெடுப்புகளை அரசு எடுத்துள்ளது.
100 சதவீத அந்நிய முதலீடு
அந்நிய நேரடி முதலீட்டிற்கு 74 சத வீதம்வரை அனுமதியளிக்கப்பட்டிருக்கி றது என்றார். மேலும் நவீன தொழில்நுட்பங் களை அணுக வாய்ப்புள்ள நிலையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனு மதி அளிக்கப்படுகிறது. எனினும் நாட்டின் பாதுகாப்பினை பாதிக்கின்ற அல்லது பாதிக்குமோ என தோன்றுகின்ற எந்தவொரு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட அந்நிய முதலீட்டையும் மறுபரிசீலனை செய்கின்ற உரிமை அரசாங்கத்தின் கையில் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். (ந.நி.)