புதுதில்லி,பிப்.8- 10 ரூபாய் நாணயத்தை சட்டபூர்வ பரி வர்த்தனைக்கு பயன்படுத்தலாம் என்று ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரி வித்துள்ளது. ‘இந்தியாவில் பெரும்பாலான பகுதி களில் பத்து ரூபாய் நாணயங்கள் போலி யானவை என கருதப்படுவது குறித்து அரசு கவனித்துள்ளதா’ என்று மாநிலங்களவை யில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி யிருந்தார். இதற்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில், “ 10 ரூபாய் நாணயம் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு மக்களு டைய பழக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் சட்டப்பூர்வமாக நடைபெறக்கூடிய டெண்டர்கள் மற்றும் சட்டப்பூர்வ பரிவர்த்த னைக்கு பத்து ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம். எனினும் சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக் கின்றன. மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த, அவ்வப்போது ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு செய்திகளை யும் விளம்பரங்களையும் வெளியிட்டு வருகிறது. மேலும், நாட்டு மக்கள் அனைவரும் 10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமுமின்றி உபயோகிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.