வடமாநிலங்களில் அக்., 15 முதல் 9 நாட்கள் நவ ராத்திரி விழா கொண்டா டப்பட்டது. நவராத்திரி கொண்டாட் டத்தின் முக்கிய நிகழ்வாக இருப் பது “கர்பா” நடனம் ஆகும். குஜ ராத் மாநிலத்தில் “கர்பா” நடனத் திற்கு என்று தனி சிறப்பு அம்சங்களு டன் பெரியளவில் விழா போன்று கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், “கர்பா” நடன கொண்டாட்டத்தில் குஜராத் மாநி லத்தில் மட்டும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் உயிரி ழந்ததாக செய்திகள் வெளியாகின. பொதுவாக விழா கால நடன நிகழ்வு களில் மாரடைப்பு காரணமாக ஒன் றிரண்டு பேர் உயிரிழப்பது வடஇந் திய மாநிலங்களில் வாடிக்கையாக நிகழ்வதாக கூறப்படுகிறது. ஆனால் குஜராத்தில் ஒரே நேரத்தில் 10 பேர் உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் பாஜக அரசு இதுவரை எவ்வித விளக்கம் அளிக்கவில்லை. “கர்பா” மர ணம் தொடர்பாக மருத்துவ நிபு ணர்களுடன் குஜராத் சுகாதா ரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் ஆலோசனை மட்டுமே மேற்கொண்டுள்ளார். “கர்பா” மரணம் தொடர்பாக செய்தியா ளர்கள் எழுப்பும் கேள்விக்கு விளக் கம் அளிக்காமல் அமைச்சர் ருஷி கேஷ் படேல் அந்த இடத்தை விட்டு நழுவி விடுகிறார். இறப்பு எண்ணிக்கையில் சந்தேகம் குஜராத்தில் “கர்பா” நடனத் தின் பொழுது 10 பேர் மட்டுமே உயி ரிழந்ததாக செய்திகள் வெளியா கின. ஆனால் உண்மையில் மாநி லம் முழுவதும் 22 பேர் உயிரிழந்த தாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலத்தில் இறப்பு எண்ணிக்கையை மறைத்தது போல “கர்பா” மரண விவகா ரத்திலும் குஜராத் பாஜக அரசு இறப்பு எண்ணிக்கையை மறைத் துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.