கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது வீரபத்ரா நகர் பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலை யத்துக்கு அருகே டிப்போவில் 40-க்கும் மேற்பட்ட தனி யார் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டி ருந்தன. திங்களன்று காலை பேருந்து ஒன் றில் திடீரென தீப் பிடித்தது. பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அருகில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்ற பேருந்துகளுக்கு தீ பரவா மல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், 10-க்கும் மேற் பட்ட தனியார் சொகுசு பேருந்துகள் முற்றி லும் எரிந்து நாசமாகியுள்ளன.