states

img

வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1,250 சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாட்டில் வார இறுதி மற்றும் தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து வெள்ளியன்று (ஆக.18) 500 சிறப்பு பேருந்துகளும், ஆக.19 அன்று 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரிலிருந்து பிற மாவட்டங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.