புதுதில்லி, ஜூலை 29- பாஜக தூண்டிவிட்ட இனக்கல வரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக் களை, ‘இந்தியா’ கூட்டணியின் 20 எம்.பி.க்களைக் கொண்ட நாடாளு மன்றக் குழுவினர், சனிக்கிழமையன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த னர். ஜூலை 29, 30 ஆகிய இரண்டு நாள் சுற்றுப்பயணத் திட்டத்துடன், சனிக்கிழ மையன்று காலை மணிப்பூர் தலை நகர் இம்பாலைச் சென்றடைந்த இந்த குழுவிற்கு, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமை வகித்துச் சென்றார். அவருடன் கவுரவ் கோகோய், பூலோ தேவி நேதம் (காங்கிரஸ்), ராஜீவ் ரஞ்சன் லாலன் சிங் (ஐக்கிய ஜனதாதளம்), கனிமொழி கருணாநிதி (திமுக), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல்), சந்தோஷ் குமார் (சிபிஐ), ஏ.ஏ.ரஹீம் (சிபிஎம்), பேரா. மனோஜ் குமார் ஜா (ராஷ்டிரிய ஜனதாதளம்), மஹூவா மாஜி (ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா), ஜாவேத் அலி கான் (சமாஜ்வாதி), பி.பி. முகமது பைசல் (தேசியவாத காங்கிரஸ்), அனீல் பிரசாத் ஹெக்டே (ஐக்கிய ஜனதா தளம்), இடி முகமது பஷீர் (இந்திய யூனி யன் முஸ்லிம் லீக்), என்.கே. பிரே மச்சந்திரன் (புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி), சுஷில் குப்தா (ஆம் ஆத்மி கட்சி), அரவிந்த் சாவந்த் (சிவசேனா), தொல். திருமாவளவன், டி. ரவிக்குமார் (விடு தலைச் சிறுத்தைகள்), ஜெயந்த் சிங் (ராஷ்ட்ரிய லோக் தளம்) ஆகிய இந் தியா கூட்டணி எம்.பி.க்களும் பங்கேற்ற னர்.
நிலவரத்தை மதிப்பீடு செய்வதே முதல் நோக்கம்
இம்பால் வந்திறங்கியதும் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி., “மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு முடிந்த வரை சென்று பாதிக்கப்பட்ட மக்களு டன் பேச விரும்புகிறோம். மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை மதிப்பீடு செய் வதே எங்கள் முயற்சி. எங்கள் பய ணத்தின் போது மாநில அரசு எந்தத் தடையையும் ஏற்படுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம்; மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், அமைதியை ஏற்படுத்தவும், மாநில மக்களின் வலி மற்றும் துன்பங்களைத் தீர்க்கவும் அரசு முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக ஆளுநர் அனுசுயா உய்கேயையும் சந் தித்துப் பேச உள்ளோம். மணிப்பூர் வன்முறையை ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக மாற்ற அரசாங்கம் விரும்புகிறது, ஆனால், அது மட்டு மல்ல - அங்கு இன மோதல்கள் நடந் துள்ளன. உலகம் முழுவதும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருவ தால், அரசாங்கம் அதைத் தவிர்க்க முயற்சிக்கக் கூடாது” என்றார்.
எங்களின் ஒருமைப்பாட்டை மக்களிடம் தெரிவிப்போம்
முன்னதாக திமுக எம்.பி. கனி மொழி கூறுகையில், “மணிப்பூர் வன் முறையில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள னர். இவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் உள்ள மக்களை சந் தத்து பேச உள்ளோம். நாங்கள் மணிப் பூர் மக்களை சந்தித்து அவர்களுடன் நிற்கிறோம் என்பதையும், அவர்களுக் காக நாங்கள் போராடுகிறோம் என்ப தையும் கூறப்போகிறோம். மணிப்பூர் மாநில ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். முகாம்களில் நாங் கள் பார்க்கும் விஷயங்களை அவரி டம் எடுத்து கூற உள்ளோம். மணிப்பூர் பற்றி நாடாளுமன்ற விவாதத்தில் பிர தமர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கி றோம்’’ என்றார்.
சூரசந்த்பூர் முகாம்களில் ஆய்வு
அதைத் தொடர்ந்து, இம்பாலிலி ருந்து ஹெலிகாப்டர்கள் மூலம், கல வரத்தால் பாதிக்கப்பட்ட நகரமான சூரசந்த்பூருக்குச் சென்ற ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் குழு, சூரசந்த்பூர் கல்லூரியின் ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம், டான் போஸ்கோ பள்ளியில் அமைக் கப்பட்டுள்ள நிவாரண முகாம் ஆகிய வற்றைப் பார்வையிட்டது. அங்கு குக்கி தலைவர்கள் மற்றும் இனக்கலவரத் தால் பாதிக்கப்பட்டவர்கள், தவிர சிவில் சமூகத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து, நிலைமைகளை கேட்ட றிந்தது.
இப்போதும் அச்சத்தில் மணிப்பூர் மக்கள்
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “மணிப்பூர் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்டனர். அரசாங்கம் தங்களுக்கு உதவாது என்பது நன்றாகவே தெரி யும் என்றும் அவநம்பிக்கை தெரி விக்கின்றனர். தற்போது அவர்கள் (இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து) சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று பேசுகிறார் கள்... ஏன், அவர்கள் (ஒன்றிய அரசு) இவ்வளவு நாளும் தூங்கிக் கொண்டி ருந்தார்களா, என்று நான் கேட்கி றேன்?” என்றும் ஆவேசமாக குறிப் பிட்டார்.
பிரதமருடன் ஒத்துழைக்கத் தயார்
“மணிப்பூரில் அமைதி திரும்பி யுள்ளதாக ஒன்றிய அரசு கூறு கிறது, அப்படியானால் மக்கள் ஏன் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள னர்? ஏன் அவர்களால் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை? என்று கேள்வியெழுப்பிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், “அனைத்துக் கட்சிக் குழுவுடன் மணிப்பூருக்கு வர பிரதமர் மோடி முடிவு செய்தால், அவருடன் ஒத்துழைக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
இரண்டு தரப்பினரையும் சந்திப்போம்
திரிணாமுல் தலைவர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், “இரு சமூகங்க ளின் பிரதிநிதிகளுடனும், ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் குழு பேசும்; அனைவரின் குரலும் கேட்கப்பட வேண்டும். நாங்கள் குக்கிஸ் மற்றும் மெய்டெய் இருவருடனும் பேசுவோம்” என்றார்.
பாஜக தலைவர்கள் கேலி
இதனிடையே, இந்தியா கூட் டணி எம்.பி.க்களின் வருகையை, தில்லி யைச் சேர்ந்த பாஜக எம்.பி. மனோஜ் திவாரி ‘அரசியல் சுற்றுலா’ என்று கேலி செய்தார். “பெண்களுக்கு எதி ரான வன்கொடுமைகள் நடக்கும் மேற்கு வங்கத்துக்கும் இதே குழு வை அழைத்து வருமாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை கேட்டுக்கொள்கி றேன்” என்று ஒன்றிய அமைச்சர் அனு ராக் தாக்கூர் தனது காழ்ப்பை வெளிப் படுத்தினார்.
ஆளுநரும் தனியாக ஆய்வு
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆராய் வதற்கு பயணம் வந்த அதேநாளில், மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தனியாகச் சென்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது சகோதர சகோ தரிகளின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள நான் இரண்டாவது முறை யாக இங்கு வந்துள்ளேன். கிட்டத் தட்ட மூன்று மாதங்கள் இந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி யுள்ளனர். தீவைப்பு காரணமாக நிறைய பேர் தங்கள் வீடுகளை இழந்தனர், பலர் தங்கள் உடமை களை இழந்தனர். அவர்களிடம் எதுவும் இல்லை. குறைந்தபட்சம் இந்த மக்கள் முகாமில் எந்தப் பிரச்ச னையையும் சந்திக்காமல் இருப் பதைப் பார்க்க நான் இங்கு வந்தேன். உடைகள் முதல் கொசு விரட்டிகள் வரை அடிப்படை வசதி களை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்றார். இதனிடையே, ஞாயிறன்றும் மணிப்பூரிலுள்ள நிவாரண முகாம் களுக்கு செல்லும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், அதன் முடிவில் ஆளு நர் அனுசுயா உய்கேவை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளனர்.