திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதைத்தொடர்ந்து இன்று பிப்லப் குமார் தேவ் தனது முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். திரிபுரா மாநில ஆளுநரிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல்வர் இன்றே அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.