புதுதில்லி, மார்ச் 12- கிரெடிட் கார்டு வாங்குவோரின் எண் ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தோடு, கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவை உச்சத்தைத் தொட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலுவைத்தொகை முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு, ரூ. 1 லட் சத்து 87 ஆயிரம் கோடியை தொட்டுள்ளதாக வும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. உயர், மத்திய தர வர்க்கத்தினர் மட்டு மன்றி, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் இன் றைய நிலையில், கிரெடிட் கார்டு பயன்பாடு அதி கம் உள்ளது. தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களை, ஏடிஎம் அட்டை எனப்படும் டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்குவதைக் காட்டிலும், கிரெடிட் கார்டு மூலம் வாங்கு வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் வங்கிக் கணக்கில் பணமிருந்தால் மட்டுமே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியும். அதாவது நமது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தியே பொருட்களை வாங்குவதா கும். ஆனால், பணமில்லாதபோது என்ன செய்வது? அதற்குத்தான் கிரெடிட் கார்டு. வங்கிகள் அளிக்கும் கடனை வைத்து, தேவைக்கான பொருட்களை வாங்கிக் கொண்டு, அனுமதிக்கப்பட்ட காலக்கெடு வுக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதா கும். அதிகபட்ச அவகாசம் 50 நாட்கள். எனி னும், செலவினத்தை மேற்கொள்ளும் தேதி யைப் பொறுத்து இது மாறும்.
இந்த அடிப்படையிலேயே, அனுமதிக் கப்பட்ட அவகாசத்திற்குள் செலுத்தப்படாத கிரெடிட் கார்டுக்கான நிலுவைத்தொகை, வர லாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 29.6 சதவிகிதம் உயர்ந்து, 1 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஜனவரியில், 1 லட்சத்து 41 ஆயி ரத்து 254 கோடி ரூபாயாக இருந்த கிரெடிட் கார்டுகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய நிலு வைத் தொகை 2023 ஜனவரியில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 783 கோடி ரூபாயாக அதிக ரித்துள்ளது. 2023 ஜனவரி இறுதிக்குள், சுமார் 8 கோடியே 25 லட்சம் கிரெடிட் கார்டுகள் பல்வேறு வங்கி களால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் கோடக் ஆகிய 5 வங்கிகளே அதிகமான எண்ணிக்கையில் கிரெடிட் கார்டுகளை வழங்கி யுள்ளன. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத் தில் அதிகரித்த டிஜிட்டல் மயமாக்கல், நிறு வனங்கள் அளிக்கும் சலுகைகள் ஆகியவை கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்புக்கு கார ணம் என்றாலும், இந்த காலத்தில் ஏற்பட்ட வேலையிழப்பு, ஊதியக்குறைப்பு, போதிய வருமானமின்மை ஆகியவையே கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்புக்கு முக்கியக் கார ணமாக பார்க்கப்படுகிறது. அதுவே தற்போது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலவிட்ட பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு மக்களை தள்ளியிருக்கிறது.
ஆனால், எஸ்பிஐ தலைமை செயல் அதி காரியும், நிர்வாக இயக்குநருமான ராம மோகன் ராவ் அமரா, வேறுவிதமாக கூறு கிறார். சுகாதாரம் மற்றும் உடல்நலம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கிரெடிட் கார்டு மூலமான செலவினங்களின் அதிகரிப்புக்கு காரணம் பணம் செலுத்துவதில் உள்ள எளிமை தான் என்று தெரிவித்துள்ளார். “ஆண்டுக்கு ஆண்டு கிரெடிட் கார்டுகளின் வளர்ச்சியைப் பார்த்தால், அவை 45 சதவிகித வளர்ச்சி கண் டுள்ளன. உண்மையில், கடந்த 11 மாதங்க ளாக கிரெடிட் கார்டு செலவினங்கள் தொடர்ந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளன” என்று தெரிவித்துள்ளார். இதையே ஆண்ட்ரோமெடா லோன்சின் நிர்வாக தலைவர் வி. சுவாமிநாதனும் வழி மொழிவது போல கூறியுள்ளார். “அடமானக் கடன்கள் மற்றும் வணிகக் கடன்கள் போன்ற பாதுகாப்பான கடன்கள் சமீப நாட்களில் பின்னடைவை பெற்றிருந்தா லும், தனிநபர் கடன் பிரிவு வளர்ந்து வரு கிறது. புதிய பட்டதாரிகள், இப்போது பணி யிடத்தில் நுழைகிறார்கள். அவர்களின் முன் னோடிகளை விட, நிதி ரீதியாக அதிக விழிப்பு ணர்வைக் கொண்டுள்ளனர். கிரெடிட் ஸ்கோர் களை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்கி றார்கள். அதிக பின்டெக் நிறுவனங்கள் ஆன் லைனில் இருப்பை உருவாக்கி, தகவல் களைப் பகிர்வதால், இளைஞர்கள் அதிக தகவலறிந்த கிரெடிட் கார்டுகளை வாங்குகி றார்கள்” என்று கடன் வாங்கி செலவிடுவதை மிகப்பெரிய திறமை போன்றும், ராஜதந்திரம் போலவும் குறிப்பிட்டுள்ளார்.