சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டி யிட 6 பேர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்க ளவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூன் 29 இல் முடிவடை கிறது. இதனைத் தொடர்ந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. வேட்மனு தாக்கல் செய்ய மே 31 கடைசி நாள் ஆகும். திமுக சார்பில் தஞ்சை சு.கல் யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.தர்மர் ஆகி யோரும் மனு தாக்கல் செய்தார். இதுதவிர 5 சுயேச்சை வேட்பாளர்க ளும் மனு தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சட்டப்பேரவைச் செய லக செயலாளர் அலுவலகத்தில் புத னன்று (ஜூன் 1) காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை ஜூன் 3 ஆம் தேதி வரை திரும்பப் பெறலாம். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யாகும்.