states

img

18 வயது மேற்பட்டோருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி

சென்னை,ஏப்.10- தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர்  தடுப்பூசி போடும் பணி ஞாயிறன்று (ஏப்.10) தொடங்கியது. தனியார் தடுப்பூசி மையங்களில் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்படு வதால், தடுப்பூசியின் விலை ரூ.225 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி விலையுடன் தனியார் தடுப்பூசி மையங் கள் சேவைக் கட்டணமாக ரூ.150 வசூ லித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மையங்க ளுக்கு சென்று பொதுமக்கள் பூஸ்டர் தடுப் பூசி போட்டுக் கொண்டனர். சென்னை யிலும் பல தனியார் மையங்களில் பொது மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப் பட்டன. கோவிஷீல்டு, கோவேக்சின் 2 தவணை போட்டவர்களுக்கு அந்தந்த தடுப்பூ சியே பூஸ்டர் தடுப்பூசியாக போடப்பட்டது. ஆன்லைன் மூலம் முன்பதிவு நடக்கும் மையங்களுக்கு நேரடியாக சென்றும் பொது மக்கள் தடுப்பூசி போட்டனர். பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு உடனடியாக கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப் பட்டன. 2-ம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டன.