சென்னை,அக்.14- யமஹா மோட்டார் தொழிற் சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி., தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். அக்டோபர் 14 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்தியா யமஹா மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 4 தினங்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். பெரும்பான் மைத் தொழிலாளர்கள் தேர்வு செய்யும் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது. மேலும், நிர்வாகம் திடீரென ஒரு போட்டி தொழிற்சங்கத்தை உருவாக்குவதும், அந்த சங்கத்தை 3 தினங்களில், தொழிற்சங்க சட்டப்படி தொழிலாளர் துறை பதிவு செய்வதும் ஜனநாயக விரோதச் செயல்களாகும். இதனால் தொழிலாளர்கள் மீது வேலை நிறுத்தம் திணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக அமைதி யாக எந்தவித இடையூறும் செய்யாத வகையில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர் களின் கோரிக்கைகளையும், வேலை நிறுத்தத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. கடந்த 2015 இல் நடைபெற்ற 55 நாட்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தே, இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கத்தை நிர்வாகம் அங்கீகரித்தது. ஊதிய உயர்வு ஒப்பந்தமும் செய்தது. ஆனால் தொழிலாளர்கள் தங்கள் தொழிற் சங்கத்தின் நிர்வாகிகளை ஜனநாயக அடிப்படையில் தேர்வு செய்ததை குற்றமாக நிர்வாகம் கருதும் காரணத் தாலேயே, இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கத்தை நிராகரித்து, போட்டி சங்கத்தை உருவாக்குகிறது. இச்செயலை தமிழகத்தின் அனைத்து ஜனநாயக சக்திகளும் வன்மையாக கண்டிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இப்பிரச்சனை குறித்து தமிழ்நாடு அரசு தலையீடு செய்வதும், சுமூகத் தீர்வு காண ஏற்பாடு செய்வதும் அவசி யம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.