states

தீக்கதிர் விரைவு செய்திகள்

உலக செஸ் ஒலிம்பியாட்: பிரதமருக்கு அழைப்பு

சென்னை, ஜூலை 15 - உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் தொலைபேசி வாயிலாக உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் உடல் நலம் விசாரித்த பிரதமருக்கு நன்றி கூறிய முதலமைச்சர், அவரிடம் தான் குணமடைந்து வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் ஜூலை 28ஆம் தேதி துவங்கும் உலக செஸ்  விளையாட்டுப் போட்டிக்கு மோடிக்கு அழைப்பு விடுக்க ஸ்டாலின் நேரில் செல்வதாக இருந்தது. உலக செஸ்  ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. எனவே, தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகி யோரை அழைப்பு விடுக்க அனுப்பி வைப்பதாகவும், துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அமைச்சருக்கு கொரோனா தொற்று

சென்னை,ஜூலை 15- தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று (ஜூலை 15) உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோ தித்ததில் கொரோனா உறுதி செய்யப் பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்”என்று பதிவிட்டுள் ளார். அமைச்சர் நாசர் வியாழனன்று (ஜூலை 14) திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருடன் திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ், பல துறை அலுவலர்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐஐடி முதலிடம்

சென்னை,ஜூலை 15- இந்தியாவின் தலைசிறந்த 10 உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை இந்திய கல்வி அமைச்சகம்  வெள்ளியன்று (ஜூலை 15) வெளியிட்டு ள்ளது. அதில், சென்னை ஐஐடி முதலி டத்தை பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐ எஸ்சி மற்றும் மும்பை ஐஐடி முறையே இரண்டாவது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், மருத்துவ உயர்  கல்வி நிலையங்களில், தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலிடத்தையும், சண்டிகர் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இர ண்டாம் இடத்தையும், வேலூர் கிறுஸ்த் துவ மருத்துவக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஆராய்ச்சி உயர் கல்வி நிலையங்க ளில், பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை யும், மெட்ராஸ் ஐஐடி இரண்டாம் இடத்தை யும், தில்லி ஐஐடி மூன்றாம் இடத்தை யும் பிடித்தன. பல் மருத்துவ உயர் கல்வி நிலையங்களில், சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி முதலிடத்திலும், மணிப்பால் மருத்துவக் கல்லூரி இரண் டாம் இடத்திலும், புனே டாக்டர் பட்டீல்  மருத்துவக் கல்லூரி மூன்றாம் இடத்தி லும் உள்ளன.

சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 35 சதவிகிதம் சரிவு

நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் சீனப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்வது 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, ரூ. 4 லட்சத்து 58 ஆயிரம் கோடி மதிப்பிலான சீனப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதேநேரம் நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது 35 சதவிகிதம் சரிந்துள்ளது.

பொருளாதாரம் தெரிந்த ஜோதிடரை நியமிக்கலாமே!

“பண வீக்கம் 7.01 சதவிகிதமாகவும், வேலைவாய்ப்பின்மை  7.8 சதவிகிதமாகவும் பதிவான நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூபிடர், பிளேட்டோ படங்களை டுவீட் செய்திருப்பது எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. தன்மீதும், அமைச்சகத்தின் பொருளாதார வல்லுநர்கள் மீதும் நம்பிக்கையை இழந்த நிலையில் அவர் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்ற  வேற்றுக் கிரகத்தின் உதவியை நாடுகிறார். இதனால் அவர் பொருளாதாரம் தெரிந்த ஜோதிடரை  நியமித்துக் கொள்ளலாம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் நிதியமைச்சரு மான ப. சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.

மோடி ஆட்சியில் நாட்டின் கடன் ரூ. 139 லட்சம் கோடி!

கடந்த 2014-ஆம் ஆண்டில் ரூ. 56 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன் தற்போது ரூ. 139 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான கடன் 2014-இல் ரூ. 44 ஆயிரத்து 348 ஆக இருந்தது, தற்போது ரூ. 1 லட்சத்து 1048 ஆக உயர்ந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளார். “அதே போன்று, 2014-இல் 4.7 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது; 2014-இல் ரூ. 410 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.1,053 ஆக உயர்ந்துள்ளது. 2014-இல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 59 ஆக இருந்த  நிலையில், அது தற்போது ரூ. 80 ஆக உள்ளது. 135 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி - இறக்கு மதி இடையேயான வர்த்தக பற்றாக்குறை, தற்போது 190 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு ஆட்சியாளர்களின் கர்வமே காரணம்” எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

வஞ்சகமான பிரச்சனைகளை பாஜக கிளப்பி விடுகிறது

மக்கள் தங்கள் தேவைகளை மட்டுப்படுத்தி, கடுமையான வறுமை மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் மன அழுத்தமான வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த நேரத்தில், மக்கள்தொகை கட்டுப்பாடு போன்ற நீண்டகால பிரச்சனைகளால் மக்களை குழப்புவது பாஜக-வின்  புத்திசாலித்தனமா? என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். “மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது நீண்ட  கால கொள்கை பிரச்சனையாகும். இதற்கு சட்டத்தை விட அதிக விழிப்புணர்வு தேவை. ஆனால்  நாட்டின் உண்மையான முன்னுரிமையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பாஜக அரசாங்கங்கள் வஞ்சகமான மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை தேர்ந்தெடுக்கின்றன” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உ.பி.யில் கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

உத்தரப் பிரதேச பாஜக அரசு, இஸ்லாமியர்களின் வீடுகளை குறிவைத்து இடித்து தரைமட்டமாக்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜம்மியத் உலமா இ-ஹிந்த்’ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக மத்தியப்பிரதேசம், குஜராத் மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. ஜம்மியத் உலமா இ- ஹிந்த் அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் சி.யு.சிங் ஆகியோரும், அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோரும் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ‘‘மாநிலம் முழுவதும் கட்டட இடிப்பு நடவடிக்கைக்கு ஒட்டு மொத்தமாக தடைவிதிக்க முடியாது. அப்படி செய்தால், அது மாநகராட்சி அதிகாரிகளின் உரிமை களை முடக்கி விடும்’’ என்று கூறியுள்ளது.

மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்த அர்ச்சகர்!

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் பெத்தஞ்சேர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தசயனா. கோயில் அர்ச்சகரான இவருக்கு, ஸ்ரவந்தி என்பவருடன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனால், மனைவி ஸ்ரவந்தியை 7 ஆண்டுகளுக்கும் மேலாக மனம் மற்றும் உடல் ரீதியாக  அனந்தசயனா சித்ரவதை செய்து வந்ததுடன், கோயிலுக்கு வரும் பல இளம்பெண்களை ஏமாற்றி அவர்களுடன் அனந்தசயனா உறவு வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆடியோ பதிவுகளையும் அனந்தசயனா சேமித்து வைத்துள்ளார். இதையறிந்த மனைவி ஸ்ரவந்தி கண்டித்த நிலையில், அவரை அர்ச்சகர் அனந்தசயனா தாக்கியதுடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.