states

முதல்வர் அலுவலகத்தில் பணி: இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 25 - முதலமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரிய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:- தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலை யுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத் திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் ஊக்க  ஊதியத்துடன் இரண்டு ஆண்டுகள் பயிற்சி வழங்கும். இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பயிற்சி களை வழங்க திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல் முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல் படுத்துதலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.