சென்னை, ஆக.17- கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1 கோடியே 54 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முதியோரின் கண்ணியமான வாழ்வு உறுதிப் படுத்த அரசு முதியோர் ஓய்வூதியம் வழங்குகிறது. முதியோரை பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்றும் அரசு கருதுகிறது. அதேவேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறுவது தடைபடக் கூடாது என்று முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்கள் முதியோர் ஓய்வூதி யம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பிக்க லாம் என்று முதல்வர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். தற்போது விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்கள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கெனவே விண்ணப்பித் திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.இதுவரை விண்ணப் பிக்காதவர்கள் தகுதியான பயனாளி கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள் ளப்பட்டுள்ளது.