states

பெரும் பணக்காரர்கள் மீதான வரியை அதிகரிக்க ஒப்பந்தம் உருவாக்குமா ஜி-20?

புதுதில்லி: பெரும் பணக்காரர்கள் ( Super Rich )  மீதான வரியை அதி கரித்து தீவிர சொத்துக்குவிப்பை தடுக்கக்கோரி மில்லியனர்கள், பொரு ளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என கிட்டத்தட்ட 300 நபர்கள் கூட்டாக  கடிதம் எழுதியுள்ளனர்.அதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடு கள் பெரும் பணக்காரர்கள் மீதான செல்வ வரி விதிக்கும் நடைமுறைக்கு சர்வதேச ஒப்பந்தத்தை ஜி-20 மாநாட் டில்  கொண்டுவர வேண்டும் என கோரிக் கைகள் எழுப்பப்பட்டுள்ளன. “செல்வக்குவிப்பின் மீதான வரி விதிப் பிற்கு ஏற்கனவே உலகின் முன்னணி பொருளாதார வல்லுநர்கள் பல கொள் கை முன்மொழிவுகள் கொடுத்துள்ள னர். பொதுமக்களும் அதை வரவேற்கின் றனர். மக்களின் விருப்பத்தை அமல் படுத்துவதற்கான நேரம் இது” என அந்த கூட்டுக் கடிதத்தில் கூறப்பட்டுள் ளது. சமத்துவமின்மையின் ஆபத்தான நிலைகளைக் குறைக்க செல்வக்குவிப் பின் மீதான வரி விதிப்பு அவசியம் என வும் அந்த கடிதம் வலியுறுத்தியுள்ளது. மேலும் அவர்களின்  கூற்றுப்படி, 5 கோடி அமெரிக்க டாலர் சொத்துக்க ளுக்கு மேல் உள்ளவர்களின்  சொத்து மதிப்பு தற்போது  இரண்டு மடங்காக அதிகரித்து 11.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஆனால் இவர்கள் ஒரு டாலருக்கு நான்கு சென்ட் (10 பைசா ) மட்டுமே செல்வ வரியாக செலுத்துகிறார்கள். சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற முன்னணி வளர்ந்து வரும் சந்தை நாடுகளைக் கொண்ட- ஜி7 பணக்கார நாடுகள் தலைமையிலான - ஜி20 அமைப்பா னது, பணக்கார தனிநபர்கள் மீதான வரிகளை உயர்த்துவதற்கும், பெரும் பணக்காரர்களை வளர்த்தெடுப்பதை  தவிர்ப்பதற்கும் கூட்டாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதம் கூறுகிறது. உலகம் ஒரு முக்கிய மான கட்டத்தில் உள்ளது; வாழ்க்கைச் செலவினம் மற்றும் காலநிலை நெருக் கடிகளைத் தீர்ப்பதற்கு நியாயமான வரிவிதிப்பு பொதுமக்களால்  ஆதரிக் கப்படுகிறது. அரசுகள் அதை  செயல் படுத்த  வேண்டிய நேரம் இது என ஆக்ஸ்பாம் அமைப்பின் தலைவரான கேட்டி சக்கரவர்த்தி கூறியுள்ளார்.