கும்பகோணம், ஜூலை 30 - திறந்தவெளி கிடங்காக உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர ஷெட் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள 98 கிராம ஊராட்சிகள், 5 பேரூராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி போன்ற முப்போக சாகுபடி செய்கின்றனர். சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் கோடை பருவம் மற்றும் முற்பட்ட நெல் சாகுபடி செய்த விவ சாயிகள், தற்போது அறுவடை பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து சம்பா, தாளடிக்கு வயலை பதப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. திருவிடைமருதூர் தாலுகாவில் பெருமளவில் நெல் பயிர் சாகு படி செய்யும் நிலையில், தற்போதைய குறுவை பட்டத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ளன. நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு 45 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை திறக்க தயார் நிலையில் உள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை திறந்தவெளி கிடங்குகளாகவும், வாடகை கட்டிடத்திலும் இயங்குகின்றன. ரெங்கநாத புரம், மேலையூர் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே சமீப காலமாக நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க நிரந்தர ஷெட் அமைக்கப் பட்டுள்ளது. மற்ற இடங்களில் திறந்தவெளி யில்தான் மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்துள்ளனர். மூடி வைக்கும் அளவிற்கு தார்ப்பாய்கள் முழுமையான அள வில் இல்லை. அவ்வப்போது திடீரென மழை பெய்கிறது. விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், நுகர்பொருள் வாணி பக் கழகம் நிரந்தர ஷெட் அமைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தஞ்சாவூர் அருகே முன்னையம்பட்டி நெல் கொள் முதல் நிலையத்தில், மழையால் சாக்குகள் கிழிந்து நெல்மணிகள் தரையில் கொட்டி வீணானதை போன்ற நிகழ்வு மற்ற கொள்முதல் நிலையங்களிலும் ஏற்படும் அபாயம் உள்ளது” என்றனர். நாச்சியார்கோயில் போன்ற நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளே, தற்காலிகமாக தகர செட் அமைத்து கொள்முத லுக்கு உதவிசெய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நுகர்பொருள் வாணிபக் கழக கோட்ட மேலாளர் இளங்கோவனிடம் கேட்டபோது, “நிரந்தர ஷெட் இல்லாத கொள்முதல் நிலை யங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஷெட் இல்லாத இடங்களில் 10 அடி உயரம், 7 அடி இறக்கம் கொண்ட அளவில் தற்காலிக ஷெட் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள் ளது. இந்த அளவின் மூலம் லாரிகளில் மூட்டைகளை ஏற்றவும் வசதியாக இருக்கும்” என்றார்.