சென்னை, ஆக. 7- சமீபத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரி களாக பதவி உயர்வு பெற்றதை அடுத்து, பல்வேறு இடங்கள் காலியான தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக ரீதியில் சிக்கல்கள் எழுந்துள் ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்கள் போதிய பணி அனுப வம் பெற்றிருந்தால் மாவட்ட கல்வி அதி காரிகளாக பதவி உயர்வு பெறு வார்கள். இது 40க்கு 60 என்ற விகிதத்தில் அளிக்கப்படுகிறது. அதாவது எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக 40 விழுக்காட்டி னரும், பணி மூப்பு அடிப்படையில் 60 விழுக்காட்டினரும் தேர்வு செய்யப்படு வார்கள். இதிலிருந்து காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில் புதிய கல்வி கொள்கை 2020இன் படி, கிரேடு 2 ஆசிரி யர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களாக மற்றும் அதற்கும் மேல் படிநிலைக்கு பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது ஆசிரி யர்கள், தலைமை ஆசிரியர்கள் மத்தி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. புதிதாக ஆசிரியர் பணியில் சேரு வோருக்கு தகுதி தேர்வு வைப்பதில் தவறில்லை. ஆனால் பணி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு என்பதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் வரை சென்று முறை யிட்டனர். ஆசிரியர் சங்கங்கள் பலவும் வழக்குகள் தொடர்ந்தன. இந்த விஷ யத்தில் தகுதித் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் வலி யுறுத்தி வருகிறார்கள்
இந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 46 பேர் மாவட்ட கல்வி அதிகாரி களாக சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற னர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளி களின் தலைமை ஆசிரியர் பணியி டங்கள் காலியாகி உள்ளன. இவற்றை விரைவாக நிரப்ப வேண்டிய கட்டா யத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1,500 முதல் 2,000 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், மேல் நிலைப் பள்ளிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் 670 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள தாகவும் தெரிய வருகிறது. ஒரு பள்ளி யில் தலைமை ஆசிரியர் தான் மிகவும் முக்கியமானவர். அவர் இல்லை யெனில் நிர்வாகத்தை நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். உதாரணமாக ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்குவதற்கான ஒப்பு தல், மாணவர்களின் ஊக்கத்தொகை சார்ந்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல், ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பிற கல்வி சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட் டவற்றை தலைமை ஆசிரியர் தான் கவனிக்க வேண்டும். தலைமை ஆசிரி யர் இல்லாத பட்சத்தில் பொறுப்பு அல்லது துணை தலைமை ஆசிரியர் அந்த பொறுப்பை கவனிப்பார். ஆனால் இவர்களால் முழுமையாக செயல்படு வதில் சிக்கல்கள் இருக்கின்றன. அதா வது திறம்பட செயல்பட முடியாது. எனவே காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசும், கல்வித்துறையும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி யாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.