பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் மனைவியின் காரை இரு திருடர்கள் திருடி சென்றனர். பின்னர் அவர்கள் வார ணாசியில் பிடிபட்டனர். இது குறித்து அரசியல் வட்டாரங்களில் சுற்றும் நகைச்சுவை: திருடர்கள் கூறுவது: காரை திருடிய எங்களை காவல்துறையினர் பின் தொடர்ந்து பிடிக்கும் வகையில்தான் நாங்கள் செயல்பட்டோம்! எனவே காவல்துறை எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கைது செய்யக்கூடாது. எங்களை நோக்கி கூச்சல் போடுபவர்கள் நாளை வருத்தப்படுவார்கள்! ஏனெனில் நாங்கள் நாளை பாஜகவில் இணையப் போகிறோம். நிர்மலாஜி யார் வேண்டுமானாலும் பாஜகவில் இணையலாம் என சொல்லிவிட்டார். நாங்கள் ஏன் இணையக்கூடாது? சமூக விரோதிகளின் புகலிடமாக பாஜக மாறிவிட்டது!
மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
“தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது மக்களின் சாதி அல்லது மத உணர்வை தூண்டும் வகையில் எவரும் பேசக்கூடாது. -தேர்தல் ஆணையம். “எதிர் கட்சிகள் ராமர் கோவில் தொடக்கவிழாவை புறக்கணித்தனர். மக்கள் இதனை நினைவில் கொள்ள வேண்டும்.” “காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல உள்ளது” பிரதமர் மோடி மேற்கண்டவாறு பேசியுள்ளார். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? இல்லை, விதிகள் எதிர்கட்சிகளுக்கு மட்டும்தானா?