states

img

கல்வியை காவிமயமாக்குவது ஏன் தவறானது? - பீட்டர் ரொனால்டு டிசௌசா

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா வளாகத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு “சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறு வனத்தை” (South Asian institution of Peace and Reconciliation) துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் ஆங்கிலேயரின் மெக் காலே கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி யமைக்க வேண்டும் என்று பேசினார். மெக்காலே கல்வி முறை நம்மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும், நமக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் எனவே மெக்காலே கல்வி முறையை பெரிய அளவில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார். மெக்காலே கல்வி முறை நம்மிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி உள்ளது.நமது பாரம்பரிய கல்வி முறையை அகற்றி விட்டு அதன் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.அந்நிய மொழியான ஆங்கி லத்தின் மூலமாக நம்மிடம் காலனித்துவ மனப்பான்மை உருவாக்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரியம் பற்றிய அறியாமையை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நமது வள மிக்க  தொன்மையான கலாச்சாரத்திலிருந்து மெக்காலே கல்வி முறை நம்மை துண்டித்து விட்டது என்று வெங்கையா நாயுடு பேசினார்.

 ஆங்கிலேயக் கல்வி முறைக்கு எதிராக அதிர்வுகளை ஏற்படுத்திய கல்வியாளர்களும், வெங்கையா நாயுடுவின் சாகசமும்

வெங்கையா நாயுடு தமது வாதத்திற்கு நியாயம் கற்பிக்க இந்திய கல்வி வானில் நட்சத்திரங்களாக ஜொலித்த பல்வேறு கல்வியாளர்களையும் துணைக்கு அழைத் துக் கொண்டார்.1990 களின் தொடக்கத்தில் தேசிய கல்வி இயக்கத்தின் உந்து சக்தியாக விளங்கிய ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கிய விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் முற்றிலும் புதுமையான தேசிய கல்வித் திட்டத்தை வடிவமைத்தார். அமர்த்தியா சென், சத்யஜித்ரே மற்றும் மகாஸ்வேதா தேவி போன்ற ஆளுமைகள் எல்லாம் அங்கு தான் கல்வி கற்றனர்.கே.சி. பட்டாச் சாரியா அவரது சுயராஜ்யம் (அக்.1930) என்ற தலைப்பிலான விரிவுரையில் மேற்கத்திய கல்வி முறை நமது மனங்களை அடிமைப் படுத்துகிறது. அது உண்மையான மனிதர்க ளுக்கு பதிலாக நிழல் மனிதர்களை உரு வாக்குகிறது.

இந்த விரும்பத்தகாத போக்கை நாம் வென்றாக வேண்டும் என்றார். அபு உர் ரஷீத் மௌல்வி என்பவர் ஆசியாவிற்கான காலாண்டிதழ்(Asiatic Quarterly) என்ற இதழை நடத்தினார். அதில் 1888 லேயே பஞ்சாபிய உயர்கல்வி கல்கத்தா பல்கலைக்கழக இணைப்பில் இருந்து விலக வேண்டும். ஏனெனில், கல்கத்தா பல்கலைக்கழகம் ஆங்கிலேய மனோபாவத்தை உருவாக்குகிறது. இத னால் பஞ்சாப் இளந்தலைமுறையினர் சொந்த நாட்டு உணர்வு அற்றவர்களாக உருவாக்கப்படுகின்றனர். கல்கத்தா பல் கலைக்கழகத்திலிருந்து விலகி உரு வாக்கப்படும் பஞ்சாபிய பல்கலைக்கழகம் ஆங்கிலேய மயமாதலை எதிர்க்கும்; உள்ளூர் மொழிகள், செம்மொழிகள், இலக்கியம், அறிவியலை கற்றுத்தரும் என்று அவர் நம்பினார். வெங்கையா நாயுடு இதையெல்லாம் சொல்லி இந்தியாவின் சொந்த கல்வி முறைக்காக வாதிடுவது புதிதல்ல என்றும் ஒரு நூற்றாண்டு காலமாக இந்திய கல்வி முறைக்காக வலியுறுத்தப்பட்டு வருவதாக வும், இதுபற்றி பேசுவதில் தான்ஒன்றும் முதல் நபர் அல்ல என்றார்.ஆனால் அவர் தனக்கு துணைக்கு அழைத்த கல்வியா ளர்கள் எல்லாம் நிச்சயமாக அவருக்கு பொருத்தமானவர்கள் அல்ல. மெக்காலே கல்வி முறை இந்தியர்களி டம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கு கிறது; அவர்களது சொந்த சிந்தனையை முடக்குகிறது;  எவ்வித விமர்சனமும் இன்றி அந்நியர்களின் சிந்தனையை பின்பற்ற செய்கிறது என்று வெங்கையா எச்சரிப்ப தெல்லாம் சரிதான்.

இந்திய கல்வி முறைக்கான சரியான பாதை-அனைத்து சிந்தனைகளையும் உள்ளடக்கிய கல்வித்திட்டம்

மெக்காலேவின் கல்விமுறையை  இந்திய கல்வி முறையாக மாற்றம் செய்வது என்பதற்கான நோக்கத்தில் உண்மை இருக்க வேண்டும். அதில் பல்வேறு சவால்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை சுட்டிக் காட்டுகிறேன். டாக்டர் எஸ் . ராதாகிருஷ்ணனின் இந்திய நாகரிகத்தின் ஆழ அகலம்  பற்றிய அறிவு யாருக்கும் குறைவானது அல்ல. அதற்கா கத்தான் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள கீழைத்தேய மதங்கள் (Eastern Religious and eEthics) துறை யில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவ ரது தலைமையில் தான் பல்கலைக்கழக கல்வி ஆணையம் அமைக்கப்பட்டது.  அவர் 1949இல் அளித்த அறிக்கையில் மதக் கல்வி யும் நமது பல்கலைக்கழகத்தில் அறிமுகப் படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். வகுப்புகள் ஒரு நிமிட அமைதியான தியா னத்துடன் துவங்க வேண்டும். முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கௌதமபுத்தர், கன்ஃபூசியஸ், ஜொ ராஸ்டர், சாக்ரடீஸ், ஏசு, முகமது நபிகள்,சோம் கரா, ராமானுஜர், மாதவர், கபீர், குருநானக்  மற்றும் காந்தி ஆகியோர்களைப் பற்றிய பாடங்கள் இருக்க வேண்டும் என்றார். இது டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் சொந்தமான பரிந்துரை பட்டியலாகும்.அவர் இந்தியாவில் உள்ள முக்கிய மதங்களை உருவாக்கிய மற்றும்  பரப்பிய வர்கள் பற்றிய வரலாறுகளை படிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். வெங்கை யா நாயுடுவின் காவிமயமாக்கப்படும் கல்வித் திட்டம் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ண னின் பரிந்துரை போன்றே திறந்த மனம் கொண்டதாக இருக்குமா?

இந்திய துணைக் கண்டத்துக்கே உரிய பல்வேறு விதமான கதையாடல்கள்

வெங்கையா நாயுடு பரிந்துரைக்கும்  காவிமயக் கல்வியில் நிச்சயமாக எந்த சிந்த னைகளை சேர்ப்பது- எவைகளை நீக்கு வது என்பது பற்றி முடிவெடுக்க வேண்டி யது இருக்கும். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். டாக்டர் ஏ. கே. ராமானு ஜத்தின் “முன்னூறு ராமாயணங்கள் “கட்டுரை சேர்க்கப்படுமா? வெங்கையா நாயுடு பரிந்துரைக்கும் மெக்காலே கல்வி முறையின் மறதி நோய்(இந்திய சிந்தனை மறுதலிப்பு) போக்கப்பட வேண்டும் என்றால்- நமது பாரம்பரியம் பற்றி பெருமைப்பட வேண்டும் என்றால் ஏ.கே ராமானுஜத்தின் கட்டுரை சேர்க்கப்பட வேண்டியதிருக்கும். ஏ.கே. ராமானுஜத்தின் நாட்டுப்புறவி யல்மேதமை ஈடு இணையற்றது. அவரது கட்டுரைகள் மக்களின் ராமாயணம் பற்றிய வாய்மொழி இலக்கியங்கள், கதை யாடல்களை கொண்டாடுகிறது. ராமாயணத்தில் மக்களின் கதையாடல் நிகழ்வு ஒன்றை விவரிக்கிறார். அந்த காட்சி யில் தன்னுடன் சீதையை காட்டுக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறான். அதற்கு சீதை இராமனிடம் தான் இல்லாமல் ஏதா வது நிகழ்ச்சி. ஏதேனும் ரசித்து பார்த்து இருக்கிறானா என்று கேட்கிறாள். ராமனை கொஞ்சம் தரக்குறைவாக காட்டும் இதுபோன்ற தத்துவார்த்த ரீதியான மெல்லிய நகைச்சுவை உணர்வு கொண்ட பாடங்கள் வெங்கையாவின் காவிமயக் கல்வித் திட்டத்தில் அனுமதிக்கப்படுமா? வெங்கையா உண்மையிலேயே இந்திய மயக் கல்வி முறையை வலியுறுத்துகிறார் எனில் , இந்தக் கல்வி முறையில் இந்தியா வின் மரபுவழி- வைதிக- பழமைவாத பாரம்பரியங்கள் மட்டுமல்ல ;அதற்கு நேரெதிரான நவீனத்துவ பாரம்பரியங்க ளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பிராமணிய சிந்தனையைப் போன்றே புத்த ,சமண சிந்தனைகளையும் சேர்க்க வேண்டும். முகலாயர்களின் சிறந்த கட்டிடக் கலைகள், சூஃபி மற்றும் பல்வேறு பக்தி இயக்கங்களின் சிந்தனைகள்  அனைத்தும் இடம்பெற வேண்டும்.

காவிமயக்கல்வியில் அறிவியல் எப்படி இருக்கும்?

அறிவியல், தொழில்நுட்பம், பொறி யியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் இந்தியமயக் கல்வி என்ன செய்யும்?அறி வியல் அறிவு உலகளாவியது என்பதால் ஜப்பானைப் போன்று உலகின் தலை சிறந்த அறிவியல் புத்தகங்களை மொழி யாக்கம் செய்வதுடன் நின்று விடுமா? அல்லது 106 வது “இந்திய அறிவியல் காங்கிர சில்” (ஜன.2019)பெருமைப்பட்டுக் கொண்டது போல சில பைத்தியக்காரத்தனமான கதையாடல்களை உள்ளடக்கியதாக இருக்குமா? இந்தியாவில் பழங்காலத்தி லேயே சோதனைக் குழாய் முறையில் குழந்தைகள் பிறந்ததாகவும், ஐன்ஸ்டீ னின் சார்பியல் தத்துவம் தவறானது என்றெல்லாம் பேசப்பட்டன. ஒன்று- அறிவியல் என்பது மேற் கத்திய அல்லது உலகளாவியது என்றோ அல்லது இந்திய அறிவியல் தனித்துவமா னது என்றோ முடிவெடுக்க வேண்டும்.  வெங்கையாநாயுடு என்ன சொல்லுவார்? மெக்காலே கல்விமுறை குறைபாடு உடை யதாக இருந்தாலும் அந்த கல்விமுறை தான் உலகின் சுந்தர் பிச்சைகளையும்,நாதெள்ளாக்க ளையும் உருவாக்கியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் முரண்பாடு

இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ஆகும். அந்தப் பல்க லைக் கழகத்தின் துணைவேந்தர் மாண வர்களின் எதிர்ப்பு இயக்கங்களை ஒடுக்குவ தற்காக மத்திய தொழிலக பாதுகாப்பு  படையை நிரந்தரமாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிறுத்தி வைத்திருக்கி றார். புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ள ஒரே பல்கலைக்கழகம் என்பதுபோல பல்கலைக்கழக வளாகத் திற்குள் பாதுகாப்பு படையினர் நிறுத்தப் பட்டுள்ள ஒரே பல்கலைக்கழகமும் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் தான்!எனில் ,இதை வெங்கையா நாயுடு ஆதரிக்கிறாரா? இந்திய அரசு இதை ஆதரிக்கிறது. வெங்கையாவின் காவிமயம் இந்திய கல்வி முறையை ஆதரிக்கிறது என்றால் இரவீந்திரநாத் தாகூரை மெக்காலே வென்று விட்டார் என்றே அர்த்தமாகும்.மெக்காலே இந்திய கல்வி முறையை உருவாக்கி இருக்கலாம். ஆனால் இந்திய குற்றவியல் சட்டத்தை உருவாக்கியவரும் மெக்காலே தான்! தற்போதைய இந்திய கல்வி முறையில் மெக்காலேவை குறை சொல்லுகிறோம் என்பது சரிதான். ஆனால் இந்தியா மிக ஆர்வத்துடன் மெக்காலே உருவாக்கிய இந்திய குற்றவியல் சட்டத்தை (விஸ்வ பாரதி பல்கலைக்கழகமும், இந்திய அரசும்) ஆரத்தழுவுகிறதே!

இந்து மார்ச் 25,2022, 
தமிழில்: ம.கதிரேசன்