தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிக ளில் உள்ள வட்டாட்சியர்கள் அலுவலகங் கள் வெள்ளையர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. மிகவும் பழமையான அந்த கட்டடங்களை துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். மிகமிக மோசமாக பழுதடைந்திருந்தால் அந்த இடங்களில் வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக அரசு கட்டிக்கொடுக்கும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். முழு கட்டண வசூல்: தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை தனியார் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் அந்த கல்லூரியை விட்டு இடையில் சென்றால் மீதமுள்ள ஆண்டிற்கான அனைத்து கட்டணத்தை யும் கட்ட வேண்டும். அப்போதுதான் மதிப்பெண், கல்விச் சான்றுகளை வழங்குவோம் என்று எந்த பள்ளியும், கல்லூரியும் நிர்பந்தம் செய்யக்கூடாது அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அது தொடர்வதாக உறுப்பினர் சொல்லியிருப்ப குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.