திருவள்ளூர், மே 10- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளா கத்தில் எந்த ஒரு பாதுகாப்பு உபகர ணங்களும் இன்றி வெறும் கைகளால் கழிவு நீர் அடைப்பை சுத்தம் செய்யும் அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர்அதிக அளவில் சென்றதால் கால்வாய்களில்அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இந்த கழிவு நீரை வெளியேற்று வதற்காக ஒருவரை வரவைத்து அவருக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல், வெறும் கைகளாலேயே சாக்க டையில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் அடைப்பை அகற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தனியார் நிறுவனங்கள், பொது வெளியில் இது போன்ற சட்ட விரோதமான செயல்கள் நடந்தால் அதற்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து, சீல் வைக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர், தங்களுடைய அலுவல கத்திலேயே இதுபோன்று நடைபெற அனு மதிக்கலாமா? இதுகுறித்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.ஜி.சந்தானம் கூறுகையில், இந்த மனித உரிமை மீறலுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், வரும் காலத்தில் இது போன்ற மனித உரிமை மீறல்கள் நடை பெறாமல் இருக்க அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டு ள்ளார். அண்மையில் மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டு பேர் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரி ழந்தனர். அந்த இடத்தை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்க டேசன் ஆய்வு செய்து, இது போன்ற செயல் கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அந்த உத்தரவை மீறும் வகையில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.